For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

🦉 திருநோலி டே டுடே🌹

08:05 AM Sep 01, 2024 IST | admin
🦉 திருநோலி டே டுடே🌹
Advertisement

இதுதான் திருநெல்வேலி சீமை!💕

Advertisement

♨️தாகத்துக்கு "தாமிரபரணி"

♨️அருவிக்கு "குற்றாலம்"

Advertisement

♨️தமிழுக்கு "பொதிகை மலை"

♨️கடலுக்கு "உவரி"

♨️டேம் க்கு "மணிமுத்தாரு"

♨️பாவம் நீங்க "பாபநாசம்"

♨️எழுமிச்சைக்கு "புளியங்குடி"

♨️அப்பளத்துக்கு "கல்லிடை"

♨️கருப்பட்டிக்கு "உடன்குடி"

♨️பாய் க்கு "பத்தமடை"

♨️தென்றலுக்கு "தென்காசி"

♨️பிரியாணிக்கு "சங்கரன்கோவில்"

♨️அழகுக்கு "அம்பை"

♨️பார்த்து ரசிக்க "மாஞ்சோலை"

♨️புலி க்கு "களக்காடு"

♨️பறவைக்கு "கூந்தங்குளம்"

♨️படிப்புக்கு "பாளையங்கோட்டை"

♨️சிமென்ட் க்கு "சங்கர்நகர்"

♨️அன்பா பேசுனா "அல்வா"

♨️வம்பா பேசுனா "அருவா"

♨️*சேதிகள் சொல்ல ‘ஆந்தை’*

இது தாம்லே எங்க திருநெல்வேலி சீமை..!👐🏻

*1790 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதிதான் திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. (அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இருந்தன.)

இந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது* என்பது எக்ஸ்ட்ரா நியூஸ்.

அதை ஒட்டி அடிசினல் ரிப்போர்ட்: 🫶

திருநெல்வேலி பக்கம் "பைய" என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள், கேட்டு இருக்கறீர்களா ? அந்த சொல்லுக்கு "மெதுவாக" என்று பொருள் .

சைக்கிள் எடுத்து ஊர் சுற்ற கிளம்பி விட்டால் அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் குரல் வரும் , "ஏல பைய போயிட்டு வா என்னா"

திருவள்ளுவர் காமத்துபாலில் ஒரு குறளில் பைய என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது காதலி காதலனைப் பார்த்து மெதுவாக சிரிக்கிறாள். இந்த சூழ்நிலையை வள்ளுவர் சொல்கிறார்

"அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்."

இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக
சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார் வள்ளுவர்.
அட, ஆமாமுங்க 2000 ஆயிரம் வருடதிற்கு முன் திருவள்ளுவர்
பயன்படுத்திய வார்த்தையை இன்னும் திருநோலிக்காரன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாங்க என்று வியப்பு வருகிறது இல்லையா?.

தமிழ் பிறந்த இடம் பொதிகை தானோ, திருநெல்வேலி மக்கள் வார்த்தைகளில் இன்னும் ஆதித் தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.

சொற்கள்:
* அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
* ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். .
* பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
* கொண்டி - தாழ்ப்பாள்
* பைய - மெதுவாக
* சாரம் - லுங்கி
* கோட்டி - மனநிலை சரியில்லாதவர்.
* வளவு - முடுக்கு,சந்து
* வேசடை - தொந்தரவு
* சிறை - தொந்தரவு
* சேக்காளி - நண்பன்
* தொரவா - சாவி
* மச்சி - மாடி
* கொடை - திருவிழா
* கசம் - ஆழமான பகுதி
* ஆக்கங்கெட்டது - not cconstructive (a bad omen)
* துஷ்டி - எழவு (funeral)
* சவுட்டு - குறைந்த
* கிடா - பெரிய ஆடு (male)
* செத்த நேரம் - கொஞ்ச நேரம்
* குறுக்க சாய்த்தல் - படுத்தல்
* பூடம் - பலி பீடம்
* அந்தானி - அப்பொழுது
* வாரியல் - துடைப்பம்
* கூவை - ஆந்தை an owl (bird of bad omen)
* இடும்பு - திமிறு (arrogance)
* சீக்கு - நோய்
* சீனி - சர்க்கரை (Sugar)
* ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்
* நொம்பலம் - வலி
* கொட்டாரம் - அரண்மனை
* திட்டு - மேடு
* சிரிப்பாணி - சிரிப்பு
* திரியாவரம் - குசும்புத்தனம்
* பாட்டம் - குத்தகை
* பொறத்தால - பின்னாலே
* மாப்பு - மன்னிப்பு
* ராத்தல் - அரை கிலோ
* சோலி – வேலை
* சங்கு – கழுத்து
* செவி – காது
* மண்டை – தலை
* செவிடு – கன்னம்
* சாவி – மணியில்லாத நெல், பதர்
* மூடு – மரத்து அடி
* குறுக்கு – முதுகு
* வெக்க - சூடு, அனல் காற்று
* வேக்காடு - வியர்வை

ஆனால் இன்று நெல்லை தமிழ் அழிந்து போகும் நிலை உருவாயிற்று காரணம் நெல்லைவாசிகளே மண் சார்ந்த் தமிழ் பேசுவதை ஏளனமாகவும் கேவலமாகவும் நினைப்பதுதான்.

அழகு தமிழ்தானே? ...

Tags :
Advertisement