For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு வெளியிட்ட கிடுக்கிப்பிடி அறிவிப்பு!

02:13 PM Oct 22, 2023 IST | admin
மகளிர் உரிமைத் தொகை  தமிழக அரசு வெளியிட்ட கிடுக்கிப்பிடி அறிவிப்பு
Advertisement

குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் ரூ.1000 தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்த மகளிருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் திட்டத்தின் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின் 1.6 கோடி பேர் அரசு வெளியிட்ட தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. மேலும், விடுபட்ட தகுதி வாய்ந்த மகளிரும் கோட்டாட்சியர் மூலம் மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான பணம் 15-ம் தேதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு நாள் முன்னதாக 14-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் தற்போது, தமிழ்நாடு அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுவோரின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன் படி, வருமான வரி துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தகவல் அதன் அடிப்படையில் மாதந்தோறும் (Monthly) சரிபார்க்கப்பட வேண்டிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இறப்புப் பதிவு (Death Registration), ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தரவுகள் (IFHRMS) மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்களின் பணியாளர்கள் பற்றிய தரவுகள். சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியத் தரவுகள் (SSS) , அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரிய தரவுகள் வருமானச் சான்று தரவுகள், நான்கு சக்கர / கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட தரவுகள் ஆய்வு செய்யப்படும்.

காலாண்டு (Quarterly) முறையில் சரிபார்க்க வேண்டிய தரவுகள் i. பொது விநியோக திட்டம் தொடர்பான தரவுகள் (PDS) சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள் (GST) . நில உடமை தொடர்பான தகவல் தளங்கள் (Tamil Nilam, Registration Data base, GRAINS Portal) அரையாண்டு (Half Yearly) முறையில் சரிபார்க்கப்பட வேண்டிய தரவுகள் தொழில் வரி செலுத்தப்பட்ட தரவுகள் Professional Tax) ii. மின்சாரப் பயன்பாட்டு தரவுகள் (TANGEDCO) ஆண்டு தோறும் (Annually) சரிபார்க்கப்பட வேண்டிய தரவுகள் வருமான வரி செலுத்தப்பட்ட / தாக்கல் செய்யப்பட்ட தரவுகள் (Income Tax)

சொத்து வரி குறித்த தரவுகள் (Property Tax) தகவல்கள் அடங்கிய தரவுகளை பராமரிக்கும் அரசுத் துறைகள் தொழில்நுட்ப தொடர்பு வழியாக நிகழ் நேரத்தில் அல்லது உரிய கால முறையில் தகவல் தரவுகளைக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட இணையதளத்திற்கு பகிர்ந்தளிக்க ஆணையிடப்படுகிறது.

முறையீடு செய்யவும் அனுமதி

இத்தகவல்கள் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் தானாகப் புதுப்பிக்க வேண்டும் (Auto Renewal), தானாகப் புதுப்பிக்கப்படுதல் மூலமாக நீக்கம் செய்யப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்து பயனாளிகள் முறையீடு செய்ய விரும்பினால் இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இணைய வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலினை இணையதளம் வழியாக பிரதி மாதம் 2ம் தேதிக்குள் சமூகப் பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
Advertisement