தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மரணப்புற்றுநோயும் மகளிர் மார்பகமும்! - அலெர்ட் ரிப்போர்ட்!!

06:01 PM Oct 27, 2023 IST | admin
Advertisement

லகெங்கிலும் உள்ள மக்கள் இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்றுக்கொண்டு, தற்போது உலகளவில் பொதுவாகக் கண்டறியப்பட்ட புற்றுநோயான மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான தடுப்பு மற்றும் வழக்கமான பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பிங்க் நிற ரிப்பனை காட்டுவதால் இது ‘பிங்க் அக்டோபர்’என்று அழைக்கப்படுகிறது.கடந்த 90 ஆண்டுகளாக ஒவ்வொரு அக்டோபரிலும் இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்படுகிறது

Advertisement

ஒரு பெண்ணுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆண் அறிந்தோ, அறியாமலோ பெண்ணின் மார்பகத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறான். இந்தப் பார்வையானது சம்பந்தப்பட்ட ஆண்களின் இயல்பைப் பொறுத்து, சட்டென்று தன் கண்களைத் திருப்பிக் கொள்வதில் ஆரம்பித்து வக்கிரமான செயலில் இறங்குவதுவரை வேறுபடும். ஆண் தரும் இந்த அசெளகரியத்தைச் சந்திக்காத பெண்கள் இந்த உலகில் கிடையவே கிடையாது என்று 100 சதவிகிதம் உறுதியாகச் சொல்லலாம். அந்தளவுக்கு ஆண்களிடம் இருக்கிற பலவீனம் இது. இத்தனைக்கும் மார்பகம் என்பது ஆணுக்கும் உண்டு.! பெண்ணுக்கும் உண்டு! ஆணைக் காட்டிலும் பெண்களின் மார்பகங்கள் சிறப்புக்குரியது! முன்னொருக் காலத்தில் பொண்கள் குனிந்து ஏதோ வேலை செய்யும் போது அவர்கள் மார்பகத்தைப் பார்த்த போக்கு ஆண்களுக்கு வசதியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு பெண்கள் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். அதிலும் துப்பாட்டா இல்லாத அவர்கள் மார்பகத்தைப் பார்க்க்கும் ஆண்களை `என்ன' என்ற கேஷூவலான கண்ணோடு கண் நோக்கிப் பார்க்கிறார்கள். காலம் மாற மாற மனிதனுடைய தவறுகள் ஆசைகள், சபலங்கள், எண்ணாங்கள் மாரிக் கொண்டே வரும். அப்படித்தான் இந்த மார்பக ஈர்ப்பும்.

Advertisement

குறிப்பாக பருவ வயதுடைய வாலிபர்கள் இளம் பெண்களின் மார்பகத்தை கண்டு பாலின கிளர்ச்சி அடைவது இயல்பானது! ஆனால் அப்படிப் பார்க்கும் ஒரு நிமிடம் அது போன்ற மார்பகங்கள்தான் தன்னைப் பெற்ற தாயிடமும் , சகோதரியிடமும் உள்ளது! அந்த மார்பகங்களில் சுரந்து வடிந்த அமுதென்னும் தாய்ப்பால் மூலம்தான் தங்கள் குழந்தைப் பருவத்தில் வாழவும் வளரவும் முடிந்தது என்பதை சிந்திக்கும் போது காம உணர்வுக்கு பதிலாக நன்றி உணர்வே ஒவ்வொரு ஆணிடமும் மேலோங்கும்!! ஆக நமது தாயிடம் - சகோதரிகளிடம்- மச்சினிகள்- தோழிகள் மனைவி- மற்றும் மகள்களிடம் அமைந்துள்ள மார்பகங்கள் வெறும் கவர்ச்சி உறுப்பல்ல! என்ற புரிதல் ஒவ்வொரு ஆணிடமும் ஏற்படவேண்டும்!!

அமுதம் சுரக்கும் மகளிரின் மார்பகங்கள் மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்க்கான பதுங்கு குழிகள் ஆகவும் திகழ்கின்றன . கடந்த பல ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோய் காரணமாக பல்லாயிரக்கணக்கான பெண்கள் அதுவும் 40 வயது முதல் 55 வயதுக்குள்ளான பெண்கள் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள்! சர்வதேச அளவில் மகளிருக்கு ஏற்படும்‌ புற்றுநோய்களில்‌ கர்ப்பப்பை புற்று நோய்க்கு அடுத்து அதிகம்‌ தோன்றுவது மார்பகப்‌ புற்றுநோய்தான்‌. இதன் ஆரம்ப கால அறிகுறிகளை பெரும்பாலும் பெண்கள் கவனிப்பதில்லை. மார்பகப்‌ புற்றுநோயின்‌ அறிகுறிகள்‌ வெளிப்படையாகத்‌ தெரியும்‌ முன்னரே, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்‌ முழுமையாக குணப்படுத்த முடியும்‌ என்கிறார் புற்றுநோய் நிபுணர்கள். அதனால் இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை தற்போது தனியார் மருத்துவமனையுடடன் இணைந்து தமிழ்நாடு அரசு சமூகநலத் துறை முன்னெடுத்துள்ளது.
பாராட்டுக்குரியது!!

மார்பக புற்றுநோய் என்றால் என்ன?

மார்பகங்களில் புற்றுநோய் செல்கள் உருவாகி அதிக அளவில் வளர்ச்சி அடையும் போது அது புற்றுநோயாக மாறுகிறது. மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் இல்லை அரிதாக ஆண்களுக்கும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகளில் கூறியுள்ளனர். பெரும்பாலும் 50 வயதில் உள்ளவர்களுக்குத்தான் மார்பக புற்றுநோய் தாக்கும். ஆனால் இன்றைய சூழலில் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயின் பிந்தைய கட்டங்களில், கட்டியானது உடலின் மற்ற பகுதிகளுக்கும் சென்று தொடர்ந்து மற்ற ஆபத்தான வளர்ச்சிகளை உருவாக்குகிறது. இந்த செயல்முறை மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஆண்களுடன் ஒப்பிடும் போது மார்பகப் புற்றுநோய் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. ஆண்களுக்கு மார்பகப் பகுதியில் அபாயகரமான திசுக்கள் உருவாக ஒரு சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. பொதுவாக, ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள்; இருப்பினும், இது எந்த வயதிலும் வரலாம்.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்

* மார்பகங்களில்‌ உள்ள கட்டியின் அளவு திடீரென்று அதிகரித்தல்.

* கட்டி இருக்கும் இடத்தில் வலி இருக்கும். கட்டி வலியுடன்‌/ வலியில்லாது இருத்தல்‌.

* மார்பகங்களில்‌ வலி

* மார்பகக் காம்புகள்‌ உள்நோக்கி அமுங்கி இருப்பது.

* மார்பக சருமத்தில் ஏற்படும் மாற்றம்.

* மார்புக்‌ காம்புகளில்‌ நீர்‌ கசிவு

* அக்குள்‌ மற்றும்‌ கழுத்துப் பகுதிகளில்‌ கட்டி/வீக்கம்‌

* மார்பகங்கள் இரண்டின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்.

* மார்புக் காம்புகளைச் சுற்றிலும் தடிப்புகள் போன்று இருத்தல்.

இது போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்வது அவசியம்.

மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

மார்பக புற்றுநோய் ஏற்பட குறிப்பிட்ட சில காரணங்களை சொல்ல முடியாது என்றாலும், சிலவற்றை கணிக்க முடியும்.

* மகப்பேறு இல்லாத பெண்கள்‌

* குழந்தைக்கு தாய்ப்பால்‌ புகட்டாத தாய்மார்கள்‌

* கர்ப்பத்தடை மாத்திரை உபயோகிப்பவர்கள்‌

* நெருங்கிய உறவினர்கள்‌ யாருக்கேனும்‌ இந்நோய்‌ இருந்தால்‌

* இளம்‌ வயதிலேயே பூப்படைதல்‌

* காலம்‌ தாழ்த்தி மாதவிடாய்‌ நிற்பது

* உடல் பருமன்.

மார்பில்‌ உண்டாகும்‌ அனைத்து கட்டிகளும்‌ புற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் கட்டிகள் தென்பட்டால் அவை மிகச்சிறிய அளவில் இருக்கும்போதே மருத்துவரை அணுகி அதற்கான

மார்பக புற்றுநோயின் நிலைகள்

புற்றுநோய் எவ்வளவு பரவுகிறது என்பதைக் கண்டறியவும், எந்த வகையான மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் நோயின் கட்டத்தை அறிவது மிகவும் முக்கியமானது.

முதல் நிலை 0.

இது ஆரம்ப நிலை மார்பக புற்றுநோயாக கருதப்படுகிறது. இந்த மட்டத்தின் கீழ், திசு குழாய்களில் இருந்து வெளியே வரவில்லை.

இரண்டாவது நிலை 1. இந்த நிலை புற்றுநோய் மற்ற திசுக்களில் மேலும் விரிவடைந்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. இது இன்னும் ஆரம்ப கட்ட மார்பக புற்றுநோய் வகையின் கீழ் வருகிறது.

அடுத்த நிலை 2 : இதன் பொருள், புற்றுநோய் இரண்டு சென்டிமீட்டருக்கும் குறைவாகவோ அல்லது ஐந்து சென்டிமீட்டருக்கு மேல் இருக்கும் ஆனால் பெரிதாகவில்லை.

நிலை 3 :என்பது உள்நாட்டில் மேம்பட்ட நிலையாகக் கருதப்படுகிறது, மேலும் இது அருகிலுள்ள திசுக்களுக்கு பரவியுள்ளது.

நிலை 4,: புற்றுநோய் கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை என உடலின் மற்ற உறுப்புகளுக்கும் மேலும் பரவியுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது.

மார்பக புற்றுநோய் சிகிச்சை

சில சிகிச்சை விருப்பங்கள் உள்ளன.

(கீமோதெரபி தெரபி என்பது அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் செய்யப்படும் மற்றொரு நடவடிக்கையாகும், இது புற்றுநோயை மீண்டும் இயக்காமல் தடுக்கும் . இது கட்டியின் அளவைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கு முன் புற்றுநோய் திசுக்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படலாம்.

மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை இந்த நோய்க்கான மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறையாகும், இந்த நடைமுறையின் கீழ், மார்பகத்திலிருந்து பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண திசுக்களுடன் புற்றுநோய் திசுவும் அகற்றப்படும் .

மார்பகப் பாதுகாப்பு அறுவை சிகிச்சை என்பது மார்பகத்தை முழுவதுமாக அகற்றுவதைத் தடுக்கும் மற்றொரு விருப்பமாகும்.

மார்பக புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை என்பது அறுவை சிகிச்சைக்குப் பிறகு பொதுவாக வழங்கப்படும் மற்றொரு சிகிச்சை முறையாகும். மீண்டும் புற்றுநோயாக மாறக்கூடிய எஞ்சியிருக்கும் கொடிய செல்களைக் கொல்ல கதிர்வீச்சு உதவுகிறது.

இம்யூனோஹிஸ்டோ கெமிஸ்ட்ரியில் ஹார்மோன் சிகிச்சை சார்பு.

சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட செல்களை புற்றுநோயாக மாற்றுவதற்கு மருந்து சிகிச்சை அளிக்கப்படலாம்.

மார்பக புற்றுநோயானது பயமுறுத்தும் மற்றும் சமாளிப்பது கடினம் ஆனால் முதல் கட்டத்தில் அடையாளம் காணப்பட்டால் அதை குணப்படுத்த முடியும். எந்தவொரு துரதிர்ஷ்டவசமான நோயையும் தடுக்க ஒவ்வொரு மாதமும் உங்கள் மார்பகங்களை எப்போதும் சுய பரிசோதனை செய்து சரிபார்க்கவும்.

மார்பக புற்றுநோய்‌ கண்டறியப்பட்டால்‌ செய்ய வேண்டியவை

* மருத்துவரிடம்‌ தவறாமல்‌ முறையாக ஆலோசனை பெறுவதை தவிர்க்கக் கூடாது.

* மருத்துவரிடம்‌ உங்கள்‌ உடலிலும்‌, மனதிலும்‌ ஏற்படும்‌ மாற்றங்கள் குறித்து வெளிப்படையாக பேசவேண்டும்.

* சத்தான சமச்சீர்‌ உணவை உட்கொள்ளுதல்‌ அவசியம். பதப்படுத்தப்பட்ட மற்றும் மசாலா அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.

* அதிக பருமனோடு இருப்பின்‌ முறையாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்ேகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* புகைபிடித்தல்‌, போதை பொருட்களை உட்கொள்ளுதல்‌ மற்றும்‌ மது அருந்துதலை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

* நச்சுத்தன்மை வாய்ந்த புகை மற்றும்‌ கெமிக்கல்களிலிருந்து உங்களை பாதுகாத்தல் அவசியம்

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Breast cancerhormone therapylump in the breastnippleRadiationrarely in menshapeSurgerySymptoms of breasttreatment chemotherapywomen
Advertisement
Next Article