தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சோசியல் மீடியாவில் பிரியங்காவை ஏன் வசைபாடுகிறார்கள்?

05:24 PM Sep 15, 2024 IST | admin
Advertisement

குக் வித் கோமாளியில் ஆங்கராக இருந்த மணிமேகலை அந்த ஷோவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்த சீசனில் குக்காக வந்த பிரியங்கா, டாமினேட் செய்வதாகவும், மற்றவர்களின் வாய்ப்புகளை பறிப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் மணிமேகலை. நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்தவர்களுக்கு மணிமேகலையின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது புரியும். போன சீசன் வரை மணிமேகலை கோமாளியாக இருந்தார். பல கெட்டப்புகளைப் போட்டு தன்னால் முடிந்தவரை இந்த ஷோவில் தன் திறமையை காட்டியிருக்கிறார். பாலா, புகழ், குரேஷி, செலிபிரட்டி குக் களுக்கு மத்தியில் மணிமேகலை கவனம் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனாலும் விடாப்பிடியாக அவர் முயற்சி செய்வதை பலமுறை கவனித்திருக்கலாம். அவருடைய தொடர் முயற்சியின் பலனாக தான் இந்த சீசனில் ரக்‌ஷனுடன் இணைந்து ஆங்கராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

விஜய் டிவியைப் பொறுத்தவரை தங்கள் பட்டறையில் இருக்கும் திறமையாளர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பார்கள். அவர்களை ஒரு பிராண்டாக வளர்த்துவிடுவதில் விஜய் டிவிக்கு நிகர் யாருமில்லை. அதே போல் மணிமேகலையின் உழைப்பு, முயற்சிக்கும் நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த சீசனில் பிரியங்கா குக்காக வந்ததில் இருந்தே அவரது டாமினேஷன் அதிகமாக இருந்தது என்பதும் உண்மை. பிரியங்காவைப் பொறுத்தவரை எந்த மேடையாக இருந்தாலும், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை தன்வசப்படுத்தி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு திறமைசாலி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரது ஓங்கி ஒலிக்கும் குரல், சத்தமாக சிரிப்பது, அவரது spantaneous டைமிங் அனைத்தும் பாராட்டவும் படுகிறது. சில சமயங்களில் விமர்சிக்கவும்படுகிறது.

Advertisement

இந்த சீசன் குக் வித் கோமாளியில் ராமர், புகழ், இர்பான் உடன் ஒரு கூட்டணி போல் அமைத்துவிட்டார் பிரியங்கா. இர்பானை தம்பி என்று அழைப்பதால், அதன் மூலம் ஒவ்வொரு எபிசோடிலும் சில காட்சிகள் கிடைத்துவிடும். பிரியங்காவை ராமர் காதலிப்பது போல் ஒரு ப்ளே செய்கிறார்கள். அதன் மூலம் ஒவ்வொரு எபிசோடிலும் அது தொடர்பான காட்சிகளிலும் பிரியங்கா இருப்பார். புகழ் vs பிரியங்கா சண்டையும் பில்டப் செய்து கொண்டே போகிறார்கள். இதனால் ஒவ்வொரு எபிசோடிலும் மற்ற குக் மற்றும் கோமாளிகளை விடவும் பிரியங்காவைத் தான் அதிகம் பார்க்கிறோம். இதை யாரும் மறுக்க முடியாது. ஒருவேளை வெங்கடேஷ் பட் இருந்திருந்தால் இதை கட்டுப்படுத்தி இருக்கலாம். செஃப் தாமுவுக்கு பேவரைட்டாகவும் பிரியங்கா இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜும் தன் இருப்பை தேட வேண்டிய நிலையில் இருப்பதால், இந்த சீசன் குக் வித் கோமாளி முழுமையாக பிரியங்கா பிடியில் இருப்பதை உணரலாம்.

பல வருட கடின உழைப்புக்குப் பிறகு ஒரு முக்கியமான ஷோவில் ஆங்கராக வாய்ப்பு கிடைக்கும் போது, அந்த வாய்ப்பில் தன் திறமையை வெளிப்படுத்த முடியவில்லையே எனும் ஆதங்கம் தான் மணிமேகலையை இந்த முடிவை நோக்கி தள்ளியிருக்குமென நினைக்கிறேன். சில எபிசோடுகளிலேயே இந்த ஷோவுக்கு யார் ஆங்கர் எனும் பேச்செல்லாம் வந்தது. பிரச்சினை பூதாகரமாக வெடித்து பிரியங்காவா? மணிமேகலையா? என முடிவெடுக்கும் நிலைக்கு விஜய் டிவியும் தள்ளப்பட்டிருக்கலாம்.

இதில் முழுமையாக பிரியங்காவை குற்றம் சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. 20-30 பேர் இருக்கும் ஒரு ரியலிட்டி ஷோவில் இருந்து 2 மணி நேரம் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதற்குள் உங்கள் பர்பாமன்ஸ் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். கண்டண்ட் கொடுக்க வேண்டும். விஜய் டிவியைப் பொறுத்தவரை யாருடைய கண்டண்ட் நன்றாக இருக்கிறதோ அது தான் எடிட்டிங்கில் வரும். பாலா வரும் எபிசோட்களில் அவர் முழுமையாக டாமினேட் செய்து விடுவார். புகழும் தன் இருப்பை எப்படியாவது காட்டிவிடுவார். மற்ற கோமாளிகளான, சரத், தங்கதுரை, சுனிதா உள்ளிட்டவர்களுக்கு கூட, மணிமேகலைக்கு இருக்கும் மனக்குமுறல்கள் இருக்கலாம்.

எது எப்படியோ சமூக வலைதளத்தில் பிரியங்காவை வசைபாடுவதற்கும், விஜய் டிவியை வசைபாடுவதற்கும் ஒரு காரணம் கிடைத்திருக்கிறது. சிறப்பான எதிர்காலம் அமைய மணிமேகலையை வாழ்த்துவோம்.

மகாதேவன் சி.எம்

Tags :
controvercyCook with ComaliManimekaipriyankaVijay tvகுக் வித் கோமாளிபிரியங்காமணிமேகலைவிஜய்டிவி
Advertisement
Next Article