For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வினேஷ் போகத் -பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்!

08:51 AM Apr 21, 2024 IST | admin
வினேஷ் போகத்  பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்
Advertisement

வினேஷ் போகத் 2020ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கும், 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது தொடர்ந்து 3வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.! ஜூலை 26-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஒலிம்பிக் போட்டி துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கிர்கிஸ்தானில் நேற்று நடந்த மகளிர் மல்யுத்தப் போட்டிக்கான 50 கிலோ எடை பிரிவினருக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில், கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வெற்றி பெற்றார் 29 வயதான வினேஷ் போகத். இதன்மூலம், ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று இறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தப் போட்டிக்கான 50 கிலோ எடை பிரிவில் தனக்கான இடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

முன்னதாக, ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தான் பங்கேற்பதை தடுக்க மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் ம்ற்றும் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆகியோர் முயன்று வருவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம்சாட்டியிருந்தார்..மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் மேற்கொண்டபோது அதில் முன்னணியில் வினேஷ் போகத் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

யார் இந்த வினேஷ் போகத்?

நம் நாட்டின் பிரபலமான மல்யுத்த குடும்பமான மகாவீர் போகத்தின் ஃபேமிலியைச் சேர்ந்தவர்தான் இந்த வினேஷ் போகத். மகாவீர் போகத்தின் பிரதரான ராஜ்பால் போகத்தின் வாரிசு இவர். கீதா மற்றும் பபிதாவைப் போன்றே வினேஷுக்கும் மகாவீரே மல்யுத்தப் பயிற்சிகளை அளித்தார். அவரின் வழிகாட்டுதல்படி மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்ட வினேஷ் மீது 2013 லிருந்து வெளிச்சம் பாய ஆரம்பித்தது. 2013 ஆம் ஆண்டில் இளையோருக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தொடர்ந்து 2014 காமென்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றார்.

இப்போது எப்படி வினேஷின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ இதற்குப் பல மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு அப்போது அவர்மீது இருந்தது. காரணம், மல்யுத்தத்துக்குப் பெயர்போன ஒரு குடும்பத்திலிருந்து வருகிறார், பிரபலமான மல்யுத்த வீராங்கனைகளான கீதா மற்றும் பபிதாவின் தங்கை, எல்லாவற்றுக்கும் மேல் இவரும் அடுத்தடுத்த பெரிய தொடர்களில் சிறப்பாக யுத்தம் செய்து பதக்கங்களை அள்ளியிருந்தார். இதனால், வினேஷ் ஒரு பதக்கத்தோடுதான் இந்தியாவுக்குப் திரும்புவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது வேறு. அப்படியொரு குற்றுயிராக வந்ததை இப்போது நினைத்தாலும் பகீர் என்றிருக்கும்.

அதாவது சீனாவைச் சேர்ந்த சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே வினேஷின் முட்டியில் பயங்கரமான எலும்பு முறிவு ஏற்பட்டு மல்யுத்தக் களத்திலேயே சரிந்து விழுந்தார். அந்த சூழலில் வினேஷ் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்தியாவுமே அப்செட் ஆகி போனது. நடப்பதறியா மயக்க நிலையில் அவர் இருக்க சுற்றி நின்று மருத்துவக்குழு அவரை ஆய்வு செய்தது. பெரிய காயமாக இருப்பதால் ஸ்கேனுக்குப் பிறகே எதுவும் சொல்லமுடியும் என மருத்துவர்கள் சொன்ன நிலையில் , ஸ்ட்ரெச்சரில் வைத்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வினேஷ் ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியேறியதால் சூன் யான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவுமே மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானது. காரணம், அதற்கு முந்தைய போட்டிகளிலெல்லாம் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார் வினேஷ். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எல்லாம் 11-0 என எதிரிக்கு இடமே கொடுக்காமல் எளிதாக வென்றிருந்தார். சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலுமே முதல் புள்ளியை வினேஷ்தான் எடுத்தார்.அந்த ஒரு செகண்ட்... ஒரு அட்டாக்... எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. முழுமையாக ஆடி முடிவு சாதகமில்லாமல் போயிருந்தால் மனது தேறியிருக்கும். எதிர்பாராத அசம்பாவிதத்தால் ஒட்டுமொத்தக் கனவும் சுக்குநூறானதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பதக்கத்தோடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர், வீல் சேரில் மனமுடைந்து வந்து சேர்ந்தார்.

அப்போது ஒலிம்பிக் கனவு கைகூடாமல்போனது ஒரு வலி என்றால், இனிமேல் இவரால் மல்யுத்தக் களத்தில் கால்பதிக்க முடியுமா என்கிற கேள்வி கொடுத்த வலி அவரைத் துளைத்தெடுத்தது. ஒட்டுமொத்த இந்தியாவுமே மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானது. காரணம், அதற்கு முந்தைய போட்டிகளில் எல்லாம் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார் வினேஷ்.காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 11-0 என எதிரிக்கு இடமே கொடுக்காமல் எளிதாக வென்றிருந்தார். சூன் யானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலுமே முதல் புள்ளியை வினேஷ்தான் எடுத்தார். ஒரு நொடி...ஒரு மூவ்...ஒரு காயம் எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது. முழுமையாக ஆடி முடிவு சாதகமில்லாமல் போயிருந்தால் மனது தேறியிருக்கும். எதிர்பாராத அசம்பாவிதத்தால் ஒட்டுமொத்த கனவும் சுக்குநூறானதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  முன்னரே சொன்னது போல் பதக்கத்தோடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் வீல் சேரில் மனமுடைந்து வந்து சேர்ந்தார். ஒலிம்பிக் கனவு கைக்கூடாமல் போனது ஒரு வலி என்றால்... இனிமேல் இவரால் மல்யுத்த களத்தில் கால்பதிக்க முடியுமா? என்கிற கேள்வி கொடுத்த வலி அவரை துளைத்தெடுத்தது.

அந்த நாள்களை என்னால் மீண்டும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. காயம் குணமாவதற்காக வீட்டிலிருந்த நேரத்தில் அழுவேன்... தூங்குவேன்... மீண்டும் எழுந்து அழுவேன். இதுதான் என்னுடைய தினசரியாக இருந்தது.-புதிய பிரிவு... புதிய எதிராளிகள்... ஆனால், வினேஷிடமிருந்தது அதே பழைய வைராக்கியம். வென்றது வினேஷின் வைராக்கியமே. ஒரு மனச்சோர்வில் ஏமாற்றத்தில் அவர் இப்படிப் பேசினாலும், ஒரு விளையாட்டு வீரருக்குரிய அழகே 'resilient' என சொல்லக்கூடிய மீண்டெழுதல்தானே! வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்து முன்னேறுபவர்களே வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள். மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி வினேஷும் மீண்டெழுந்தார். 2016 ரியோ ஒலிம்பிக் கொடுத்த ஏக்கம், ஏமாற்றம், வலி எல்லாம் சேர்ந்து ஒரு திடமான வினேஷ் 2.0 வெர்ஷனை உருவாக்கியது.

ஒரு எதிர்பாராத புறச்சூழலால் வெற்றியைத் தவறவிட்டவரின் வெறி எப்படியிருக்கும் என்பதை வினேஷ் காட்டத் தொடங்கினார். காயத்திலிருந்து மீண்ட பிறகு அவர் செய்த அத்தனை யுத்தங்களிலும் பயங்கரமான பவர் தெரிந்தது. 2017 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்த மல்யுத்தக் களத்தை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிட மாட்டேன் உலகுக்கே உரக்கக் கூறினார். அடுத்தடுத்து வெற்றிகளும் பதக்கங்களும் குவிந்துகொண்டே இருந்தன. 2018-ல் காமென்வெல்த் தொடரில் தங்கம், ஆசியப் போட்டிகளில் சூன் யானை வீழ்த்தி, தங்கம் என ஒவ்வொரு தொடரிலும் அடித்து நொறுக்கினார்.

இந்நிலையில்தான் டோக்கியோ ஒலிம்பிக்கை மனதில் வைத்து மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்கிறார் வினேஷ். இதுவரை 48, 50 கிலோ எடைப்பிரிவுகளில் ஆடிக்கொண்டிருந்தவர் தன்னுடைய எடையைக் கொஞ்சம் கூட்டினால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார். இதன்மூலம் எளிதில் காயத்தில் சிக்குவது குறையும், மேலும் தொடர் போட்டிகளினால் ஏற்படும் தசைச்சோர்வும் குறையும்.

நினைத்தபடியே தன்னுடைய எடையைக் கூட்டி 53 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினார். இந்தப் பிரிவில் அவருக்குக் கூடுதல் சவால்கள் காத்திருந்தன. இதுவரை அவர் போட்டியிடாத வீராங்கனைகளுடன் போட்டியிட வேண்டும். '2016 ஒலிம்பிக்கிற்குப் பிறகு, நான் எதற்கும் தயாராகவே இருந்தேன். அதனால் இந்தச் சவாலையும் ஏற்றேன்' என அவரே கூறினார்.

புதிய பிரிவு... புதிய எதிராளிகள்... ஆனால், வினேஷிடமிருந்தது அதே பழைய வைராக்கியம். வென்றது வினேஷின் வைராக்கியமே. 2019 உலக சாம்பியன்ஷிப் தொடரில் 53 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டும் அவருக்கு கிடைத்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்திற்கு மூன்று முறை தகுதிபெற்ற முதல் நபர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். இது அவரின் நெஞ்சுரத்திற்குக் கிடைத்த வெற்றி. இப்போது தன்னுடைய கரியரின் உச்சபட்ச நிலையை அடைந்திருக்கிறார்.

முன்னதாக, இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில், மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் சாம்பியனான வினேஷ் போகத் (50 கிலோ) சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் தான் நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்ற 3 போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் வினேஷ் போகத். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நாமும் ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் பத்தகம் வெல்ல வாழ்த்துவோமே!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement