For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பெண்களுக்கான கழிப்பிட வசதிகள்- கனிமொழி சோமு எம்.பி.வேதனை!

12:05 PM Jul 26, 2024 IST | admin
பெண்களுக்கான கழிப்பிட வசதிகள்  கனிமொழி சோமு எம் பி வேதனை
Advertisement

ந்தியாவின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய பல்வேறு துறைகளில் பெண்கள் மேலோங்கி உள்ளனர். அரசியல், மருத்துவம், உயர்கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் கொடி கட்டி பறந்து வரும் பெண்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் பெண்கள், பொது இடங்களில் கழிப்பிட வசதி முதல் நாப்கின்களை அப்புறப்படுத்துவது வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்காக அரசு அலுவலகங்களுக்கும், பணப் பரிவர்த்தனைகளுக்காக வங்கிகளுக்கும், உடல்நலக் குறைபாட்டிற்காக மருத்துவமனைகளுக்கும் செல்கின்றனர்.அதில் பல பெண்கள் மாதவிடாயை (menstrual) எதிர்கொண்டிருப்பர். இவ்விடங்களில் இப்பெண்களுக்கு சுகாதார வசதிகள் தரமானதாக இருக்கிறதா என்று கேட்டால்? 100 சதவீதம் தரமானதாக இருக்கிறது என்று கூற முடியாது என்கின்றனர் பொதுமக்கள். அது மட்டுமல்லாமல், கறை படிந்து, துர்நாற்றத்துடனேயே இருப்பதாகவும், நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான வசதிகளும் இல்லாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Advertisement

இப்படியான சுகாதாரமற்ற கழிப்பிடங்களை உபயோகப்படுத்துவதால் பலர் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். கல்வி நிலையங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் கூட இதே நிலை தொடர்கிறது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, கடந்த ஜூலை 23ஆம் தேதி இது குறித்து எம்பி கனிமொழி சோமு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

Advertisement

இது குறித்து அவர், ''நம் நாட்டி ல் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணி இடங்களில் உரிய கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் இல்லை என்ற உண்மையை மிகுந்த மனவேதனைக்கு இடையே இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் இந்த நேரத்தில் அந்த இடங்களில் அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது துரதிஷ்டவசமானது. பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள் வரை, வங்கிகள் தொடங்கி பொதுத்துறை அலுவலகங்கள் வரை தினசரி சென்று வரும் லட்சக்கணக்கான மாணவிகள் மற்றும் பெண்கள் பல மணி நேரங்களுக்கு இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவலநிலைதான் இன்றைக்கும் இருக்கிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களிலும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் சூழலில், தனியார் நிறுவனங்களும் கூட குறைந்த பட்ச கழிப்பிட, சுகாதார வசதிகளை செய்துதர மறுக்கின்றன. இது பெண்களின் உடல்நிலையை பாதிப்பது மட்டுமல்ல. அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் பாதிக்கிறது என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல… இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், வேலைக்குச் செல்லவே தயங்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதையும் இந்த அரசு கவனிக்க வேண்டும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்று இந்த அரசு பெருமைப்படும் நேரத்தில், இந்த அவலநிலை முட்டாள்தனமானது மட்டுமல்ல, அவமானகரமானதும் கூட.

எனவே எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னையை ஈடுபாட்டோடு அணுகி, கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் பெண்களுக்கான அடிப்படை சுகாதாரத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டும். அதன் மூலம் பாலினச் சமத்துவத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கனிமொழி சோமு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement