For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலான ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா!

09:44 AM Jan 10, 2024 IST | admin
தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலான ஆர் சண்முகசுந்தரம் ராஜினாமா
Advertisement

மிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பல்வேறு வழக்குகளைக் கையாண்டு வந்த சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது தனிப்பட்ட காரியங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், தொடர்ந்து தனித்த முறையில் வழக்கறிஞராகச் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021ம் ஆண்டு அமைந்ததை அடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இவர் தனது தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ். ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார். பிறகு பல முக்கியமான கிரிமினில் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், மாநில அரசு, சி.பி.ஐ., ரயில்வே சார்பாக பல வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார்.

Advertisement

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய சண்முகசுந்தரம், இங்கிலாந்து நீதிமன்றங்களிலும் பணியாற்றிய பழுத்த அனுபவம் மிக்கவர். அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சண்முகசுந்தரம், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மிக நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். அதன் காரணமாகவே கலைஞர் கருணாநிதி ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் 4-ம் பாகத்தில் சண்முகசுந்தரம் குறித்தும் அவரது குடும்ப பாரம்பரியம் பற்றியும் எழுதியுள்ளார்.

முன்னதாக ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவியாக சண்முகசுந்தரம் அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர். மேலும், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி நில அபரிப்பு வழக்குகளில் அவருக்கு எதிராக முக்கியமான சட்ட பணிகளை ஆற்றியவர் சண்முகசுந்தரம். 1995-ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான டான்சி நில அபகரிப்பு வழக்கில் ஆவணங்களைத் திரட்டிக் கொண்டிருந்த சண்முகசுந்தரம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர் காப்பாற்றப்பட்டார்.

அதன்பிறகு, 2-6-1995-ல் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடப்படவேண்டும் என்று ஒரு தனித் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.இந்த அளவுக்கு நீண்ட பின்னணி கொண்ட சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வயது முதிர்வு, வேலை பளு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய சண்முகசுந்தரம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களாகவே இது குறித்து யோசித்துவந்த சண்முகசுந்தரம், தற்போது ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், தமிழக அரசிடமும் தகவலை தெரிவித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த ராஜினாமா முடிவு திமுக மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement