For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்டர்!

07:18 PM Jul 14, 2024 IST | admin
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்டர்
Advertisement

குஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பலின் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ், திருவேங்கிடம் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

மேலும் , இவர்கள் 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தனித்தனியே தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. கைது செய்யப்பட்டவர்களின் ஒருவரான திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பணம் செலுத்தப்பட்டதை போலீஸாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் திருவேங்கடத்தின் வீட்டருகே புதைக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

Advertisement

இதனையடுத்து அது தொடர்பாக விசாரணை செய்வதற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவேங்கடத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அதிகாலை போலீஸார் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். சரியாக 5.30 மணியளவில் வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி திருவேங்கடம் தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது.

தங்களிடமிருந்து தப்பித்து வெஜிடேரியன் வில்லேஜ் பகுதிக்குள் நுழைந்த திருவேங்கடத்தை போலீஸார் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து காவல் துறையினரை சுட முயற்சித்தாகவும், இதனால் தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கியால் இருமுறை சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் திருவேங்கடத்தின் இடது நெஞ்சுக்கு அருகேயும் வயிற்று பகுதியிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன.

இதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. திருவேங்கடத்தின் மீது ஏற்கெனவே, 2015 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் தென்னரசு கொலை வழக்கு உட்பட மூன்று கொலை வழக்குகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இந்த என் கவுன்டர் கொலையை பலரும் விமர்சித்து வருகிறார்கள்

Advertisement