தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

திமுகவை விட்டு விலகுகிறார் திருமாவளவன்!?

08:20 PM Sep 14, 2024 IST | admin
Advertisement

திமுக வுடன் கூட்டணி வைத்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு' குறித்து அவர் பேசும் வீடியோ இன்று (செப்.14) காலை பகிரப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், அந்த வீடியோ மீண்டும் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ இணைப்புக்கு மேல், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! - என 1999-ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி" என்று கடந்த செப்.12-ம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் மது விலக்கை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, விசிக மகளிர் அணி சார்பில் அக்.,2-ல் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடை கள்ளக்குறிச்சியில் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியாக உள்ள விசிக-வின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து கடந்த சில நாட்களாக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முருகன் மாநாடு விவகாரத்தில் திமுக மீது விசிகவினர் வைத்த விமர்சனம் தொடங்கி, மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு வரை, திமுக கூட்டணிக்கு நெருக்கடி தரும் வகையில் விசிக-வின் செயல்பாடுகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.மேலும், விசிக நடத்தும் இந்த மாநாட்டில் அதிமுக-வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் கூறியதும் கவனம் பெற்றது. இதுபோன்ற சூழலில், அமெரிக்கா பயணம் முடிந்து இன்று சென்னைக்கு வந்த முதல்வர் ஸ்டாலிடம், விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, '' விசிக மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து நான் விளக்கம் சொல்ல ஒன்றும் இல்லை'' என கூறிவிட்டார். முதல்வர் இவ்வாறு பதில் அளித்த சில மணி நேரங்களில் விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் மும்பு பேசிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், '' ஆட்சியிலும் பங்கு ..அதிகாரத்திலும் பங்கு.. கடைசி மனிதனுக்கும் சனநாயகம் ! எளிய மக்களுக்கும் அதிகாரம்!..'' என குறிப்பிட்டுள்ள திருமாவாவன் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் வகையில் பேசியுள்ளார். அப்படி அவர் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று பகிரப்பட்டிருந்தது. பின்னர் சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டு மறுபடியும் பகிரப்பட்டுள்ளது .

Advertisement

சில மாதங்களுக்கு முன்பு பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைக் கண்டித்தும், கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய திருமாவளவன், “உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது” என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசும் அவரது பழைய பேச்சு அடங்கிய வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, பின்னர் அதனை உடனடியாக நீக்கியதும் கவனம் பெற்றது. மதுரையில் இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என, 1999-ல் பேசினேன். இதை நினைவுபடுத்தி செங்கல்பட்டில் நான் பேசியதை எனது, அட்மின் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஏன் அதை நீக்கினார்? எனத் தெரியவில்லை. இன்னும் எனது அட்மினை தொடர்பு கொண்டு பேசவில்லை. அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் எங்கள் கோரிக்கை. எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலோடு இதை முடிச்சு போடக் கூடாது,” என்று கூறியிருந்த நிலையில் மீண்டும் அந்த பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
dmkPoliticspowerthirumavalavanஅதிகாரம்ஆட்சிகூட்டணிதிமுகதிருமாவளவன்
Advertisement
Next Article