For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இலங்கை: அதிபராக ரணில் விக்ரசிங்கவுக்குந் அதிகரிக்கும் ஆதரவு!

07:19 PM Aug 17, 2024 IST | admin
இலங்கை  அதிபராக ரணில் விக்ரசிங்கவுக்குந் அதிகரிக்கும் ஆதரவு
Advertisement

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரசிங்கவுக்கு 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2022 இல் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள்கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் அல்லல்படும் அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் தீவிரப் போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக, அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவியை விட்டு ராஜிநாமா செய்தார்.இந்த சூழலில் இலங்கையில், செப்டம்பர் 21 ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடிக்குபின் நடக்க உள்ள முதல் அதிபர் தேர்தலான இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் போட்டியிடுகிறார்.

இதேபோல், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏற்பதற்கான காலக்கெடு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இந்தத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 38 பேர் போட்டியிடுகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரசிங்கவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. அதாவது, ராஜபட்ச சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியிலிருந்து பிரிந்த அணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ரணில் விக்ரசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement