தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சீதாராம் யெச்சூரி காலமானார்- தலைவர்கள் இரங்கல்!

08:33 PM Sep 12, 2024 IST | admin
Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆக.19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

காங்கிரஸ்

Advertisement

“கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் மூத்த தலைவருமான சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அவரது காலடியில் சாந்தியடையட்டும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் ஆற்றலை வழங்கட்டும் ”

ராகுல் காந்தி

“சீதாராம் யெச்சூரி எனது நண்பர். இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சீதாராம் யெச்சூரி, நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதல் உள்ள மிகச்சிறந்த பாதுகாவலர். நம் நாட்டின் மீது தெளிவான புரிதல் கொண்டவர், அதன் கொள்கையை காப்பாற்ற நினைப்பவர். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்”

மு.க ஸ்டாலின்

“இடதுசாரி இயக்கத்தின் தீவிர வீரரும், இந்திய அரசியலில் உயர்ந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவருடன் நான் கொண்டிருந்த நுண்ணறிவான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

எடப்பாடி பழனிச்சாமி

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் திரு. சீதாராம் யெச்சூரி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்”

டி. டி. வி. தினகரன்

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.அரசியல்வாதியாக, பொருளாதார நிபுணராக, எழுத்தாளராக பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த திரு.சீதாராம் யெச்சூரி அவர்களை இழந்துவாடும் உறவினர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”

Tags :
CPMpasses awaySitaram YechuryYechury
Advertisement
Next Article