For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கிடுச்சு!- வீடியோ

11:32 AM Oct 14, 2023 IST | admin
நாகை   இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கிடுச்சு    வீடியோ
Advertisement

மிழகத்திலுள்ள நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. தொடக்கத் தினமான இன்று பயணிகளுக்கான கட்டணத்தில் 75 சதவீத அறிமுக சலுகை வழங்கப்பட்ட நிலையில், 50 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த பயணத்திற்கு பாஸ்போர்ட் இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது என பிரதமர் மோடி-இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத்தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்து விட்டது. கடந்த 8-ந்தேதி நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டமும் நடந்து முடிவடைந்து விட்டது.

Advertisement

150 பேர் பயணம் செய்யும் இந்த கப்பலில் நாகையில் இருந்து இலங்கைக்கு செல்வதற்காக 30 பேரும், இலங்கையில் இருந்து நாகைக்கு வருவதற்காக 26 பேரும் டிக்கெட் புக்கிங் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 10-ந்தேதி தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டு 12-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதன்பின்னர் நிர்வாக காரணத்துக்காக மீண்டும் 14-ந்தேதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 2 முறை கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார்.

நாகை துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் அமைந்துள்ளதால் 3 மணி நேரம் 30 நிமிடத்தில் இலங்கைக்கு செல்லலாம். இதன்மூலம் தென்னிந்தியாவுடன் இலங்கையின் வடக்குப் பகுதிக்கு இணைப்பு எளிதாகும். அதாவது 8 முதல் 10 மணி நேர கடினமான பயணம் இனி 3 முதல் 4 மணி நேரத்திற்குள் எளிமையாக முடியும் என கூறப்பட்டுள்ளது. விமானத்தில் 15 கிலோ உடைமை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், கப்பலில் 55 கிலோ எடை வரை உடமைகளை எடுத்துச் செல்ல முடியும்.

நாகையில் இருந்து இலங்கை சென்று வர 6,000 லிட்டர் டீசல் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 6,500 ரூபாயாக உள்ளது. 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 7,670 ரூபாயாக பயணக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஆன்மீக சுற்றுலா செல்வோர், வணிகர்கள், மாணவர்கள் இந்த கப்பல் சேவை மூலம் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement