தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ராஜிவ் 80 வது பிறந்தநாள்: நினைவிடத்தில் மலர்தூவி ராகுல்காந்தி உருக்கம்!

05:17 PM Aug 20, 2024 IST | admin
Advertisement

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் அமைந்துள்ள வீரபூமியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Advertisement

ராகுல் காந்தி உருக்கம்

தந்தையின் பிறந்தாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறி இருப்பதாவது:–

Advertisement

“இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்.. அப்பா, உங்கள் போதனைகள் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கிறது. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இதற்கு முன் எப்போதும் செய்திராத விஷயங்களை செய்து 21 ஆம் நூற்றாண்டுக்கு இந்தியாவை கொண்டு வர பங்காற்றியவர்” என்று தெரிவித்தார்.

Tags :
80th birthdaymemorialRahul Gandhirajiv
Advertisement
Next Article