தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் பணிவாய்ப்பு!

01:50 PM Sep 04, 2024 IST | admin
Advertisement

ரசுக்குச் சொந்தமான பஞ்சாப் & சிந்த் வங்கி, நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 100 கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில், வங்கி தனது நெட்வொர்க்கில் 100 புதிய ஏடிஎம்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. "100 கிளைகள் கூடுதலாக, 2024-25 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 1,665 ஐ எட்டும், அதே போல், ஏடிஎம்களின் எண்ணிக்கை 1,135 ஐ தொடும்" என்று பஞ்சாப் & சிந்து வங்கியின் நிர்வாக இயக்குனர் ஸ்வரூப் குமார் சாஹா ர். இந்நிலையில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் அதிகாரி, மேலாளர், தலைமை மேலாளார், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 213 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

கல்வி தகுதிகள் என்ன?

Advertisement

* தலைமை மேலாளர், மூத்த மேலாளர் பணியிடங்களுக்கு BE/ B. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மேலாளர் பணியிடங்களுக்கு MBA/PGDM/PGDBM பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

* அதிகாரி பணியிடங்களுக்கு 20 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

* மேலாளர் பணியிடங்களுக்கு 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

* மூத்த மேலாளர் பணியிடங்களுக்கு 25 வயது முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

* தலைமை மேலாளர் பணியிடங்களுக்கு 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://punjabandsindbank.co.in/என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20.

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்

\விண்ணப்பக்கட்டணம் ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.

Tags :
jobsPunjab and Sind Bankபஞ்சாப் & சிந்த் வங்கிவங்கி பணி
Advertisement
Next Article