For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பதஞ்சலி நிறுவனம் விவகாரம்: பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது - சுப்ரீம் கோர்ட் காட்டம்!.

06:02 PM Apr 02, 2024 IST | admin
பதஞ்சலி நிறுவனம் விவகாரம்  பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது    சுப்ரீம் கோர்ட்  காட்டம்
Advertisement

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த கோர்ட், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட் , மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை.

Advertisement

இதைத் தொடர்ந்து வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை சுப்ரீம் கோர்ட் வழங்கியது. இந்த நோட்டீஸ் குறித்து பதிலளிக்காத பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து நோட்டீஸிற்கு பதில் அளித்த பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். மேலும் மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்த விவகாரத்தில் பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டது. விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல்களை வெளியிட மாட்டோம் என சுப்ரீம் கோர்ட்டில் பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்தது.

Advertisement

இதனிடையே ஏப்ரல் 2ம் தேதி(இன்று) பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் பதஞ்சலியின் மருந்துப் பொருட்களின் தவறான விளம்பரத்திற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக பாபா ராம்தேவ் சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆனால் அவரின் மன்னிப்பை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் ஆஜரான பாபா ராம்தேவ், நிறுவனத்தின் மீடியா பிரிவுதான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர்; அதற்கு மன்னிப்பு கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா என்ன? எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? அறிவியல் ரீதியிலான நிரூபணம் உள்ளதா? வழக்கு விசாரணையில் உள்ளபோது எவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முடியும்? நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பு என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்து விட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்புக் கேட்டால் எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யவில்லை? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதுடன் நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு எனவும் நீதிபதிகள் காட்டமாக கூறினர்.

மேலும் நீதிமன்றத்திடம் அளித்துள்ள உறுதிமொழிகளை பாபா ராம்தேவின் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட், “நீங்கள் ஒவ்வொரு தடையையும் மீறி இருக்கிறீர்கள். இது அப்பட்டமான அத்துமீறல். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளும் மதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தது. அத்துடன் , அவமதிப்பு நடவடிக்கைக்கு பதிலளிக்க பாபா ராம்தேவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட் , வழக்கு விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags :
Advertisement