For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் :இந்திய மல்யுத்தம் வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

01:35 PM Aug 07, 2024 IST | admin
பாரிஸ் ஒலிம்பிக்  இந்திய மல்யுத்தம் வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம்
Advertisement

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மகளிர் மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் தற்போது 33-வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் சார்பாக பல வீரர் மற்றும் வீராங்கனைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணி இது வரை 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகளீருக்கான 50கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தற்போது இறுதி போட்டி வரை வந்திருந்தார்.

Advertisement

நேற்று மல்யுத்த அரையிறுதி சுற்றில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மகளிர் மல்யுத்தத்தில் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில் அமெரிக்க வீராங்கனையுடன் இன்று இறுதி போட்டியில் மோதவிருந்தார்.இந் நிலையில் தற்போது அவர் அந்த இறுதி போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கி எடை பிரிவுக்கான போட்டியில் அவரது எடை 100 கிராம் அதிகம் உள்ளதால் அதாவது 50.100 கிராம் உள்ளதன் காரணமாக அவரை இறுதி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது ஒலிம்பிக் கமிட்டி. இந்த தகுதி நீக்கத்தில் சந்தேகம் இருப்பதாக பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவிற்கு கண்டிப்பாக இந்த மல்யுத்த போட்டியில் தங்கம் அல்லது ஒரு வெள்ளி பதக்கம் நிச்சயம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்த இந்திய ரசிகர்கள் இந்த செய்தி ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 1 கிலோ கூட அதிகம் இல்லை வெறும் 100கிராம் எடை அதிகம் இருந்தன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இதனை எந்த ரசிகர்களாலும் ஏற்று கொள்ள முடியாத வண்ணம் உள்ளது.

மேலும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பதக்க கனவு பறிபோனதென்றே கூறலாம். தற்போது, மல்யுத்த இறுதி போட்டியானது நடைபெறாததால் தங்கப் பதக்கம் அமெரிக்கா வீராங்கணைக்கு அளிப்பார்கள் எனவும், அதே போல வெள்ளிப் பதக்கம் யாருக்கும் அளிக்கப்படாது எனவும், வெண்கல பதக்கத்திற்கான போட்டி மட்டுமே நடைபெறும் எனவும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதை அடுத்து இந்திய மல்யுத்த அணி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் அணியின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை எடை பார்க்கும் ப்பொது 50 கிலோவுக்கு மேல் எடை கொண்டிருந்தார். இந்த நேரத்தில் குழுவினரால் மேற்கொண்டு எந்த கருத்தும் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. மேலும் கையில் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement