For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மூளை செல்கள் ஒன்றுக்கொன்று பேசும் புதிய வழி கண்டுபிடிப்பு!

08:04 PM Mar 03, 2024 IST | admin
மூளை செல்கள் ஒன்றுக்கொன்று பேசும் புதிய வழி கண்டுபிடிப்பு
Advertisement

ப்போதெல்லாம் சக்தி வாய்ந்த சாதனம் ஒன்றின் உதவியால் ஒருவர் மனதில் நினைக்கும் செய்திகள் மின் அலைகள் மூலம் பைனரியாக மாற்றப்பட்டு அனுப்பப்டுகின்றன. இந்த செய்தி பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மற்றொருவரின் மூளையில் சென்றடைந்து பின்னர் அந்த பைனரி செய்தி எழுத்து வடிவில் கம்ப்யூட்டர் உதவியால் மாற்றப்படுகிறது. தகவல் பரிமாற்றம் இனி வரும் காலங்களில் தற்போது கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலம் வீடியோ சாட்டிங்கில் பேசிக்கொள்வது போல மனித மூளையுடன் நேரடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் சொல்லி வந்த நிலையில் மூளை செல்கள் ஒன்றுக்கொன்று பேசும் புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நாம் முன்பு புரிந்துகொண்டதை விட மிகவும் சிக்கலான மனித மூளையின் சக்தியைக் காட்டுவதாக உள்ளது என்றும் கருதுகின்றனர்.

Advertisement

யாரையேனும் திறன்பேசியில் அழைக்க வேண்டுமானால், அதை எடுத்துத் தொடுதிரையைத் தொட்டு, பெயரைத் தேடி அழைப்பதுதான் வழக்கம். சில திறன்பேசிகளில் நண்பரின் பெயரை உச்சரித்தால் அதுவே அழைத்துவிடும். ஆனால், கைகளைப் பயன்படுத்த முடியாத அல்லது பேச முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் நரம்பியல் நோய்கள் உள்ள நபர்களுக்கு இது சாத்தியமல்ல. இப்படிப் பாதிப்புக்குள்ளான நபர்கள், நண்பர் ஒருவரைத் தொடர்புகொள்ள வேண்டுமென்று சிந்தித்தாலே போதும், அவரது திறன்பேசி அவர் நினைத்த நண்பருக்கு அழைப்பைப் பெற்றுக்கொடுக்கும்; அல்லது பேச முடியாத நபரின் சிந்தனைகளை அவரது நண்பருக்குத் திறன்பேசியின் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்ப முடியும். இதைதான் எலான் மஸ்க்கின் ‘நியூராலிங்க்’ (Neuralink) நிறுவனத்தின் ‘டெலிபதி திட்டம்’ (Telepathy project) என்கிறார்கள்..!

Advertisement

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த கட்டுரை சயின்ஸ் அலெர்ட் இதழில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில், மூளை கால்சியம் அயனிகளைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான சமிக்ஞையை வெளிப்படுத்துகிறது என்றும் இது மூளையின் தகவல் தொடர்பு கருவியில் மற்றொரு புதிய அம்சமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மூளையின் வெளிப்புற அடுக்கில் இந்த செய்தி அனுப்பும் முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளிடமிருந்து மூளை திசு மாதிரிகளைப் பெற்று பகுப்பாய்வு செய்த விஞ்ஞானிகள், மூளை செல்கள் சோடியம் அயனிகள் மட்டுமின்றி, கால்சியம் அயனிகளையும் பயன்படுத்தி சமிக்ஞைகளை அனுப்பவுதைக் கண்டறிந்தனர்.

இந்த சோடியம், கால்சியம் அயனிகளின் சமிக்ஞைகள் டென்ட்ரிடிக் செயல் திறன் எனப்படும் முற்றிலும் புதிய மின் அலைகளை உருவாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர். மனித மூளை பெரும்பாலும் கணினியுடன் ஒப்பிடப்படுகிறது. இரண்டுமே தகவல் பரிமாற்றத்துக்கு மின் சமிக்ஞைகளை நம்பியுள்ளன. கணினிகளில், இது எலக்ட்ரான்களின் ஓட்டத்தை உள்ளடக்கியது. அதே நேரத்தில் நியூரான்களும் பயன்படுத்துகின்றன. இந்த பரிமாற்றம், ஒரு செயல்திறன் என அழைக்கப்படுகிறது. இது நியூரான்கள் பாரம்பரியமாக எவ்வாறு தொடர்பு கொள்கிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட dCaAP செயல்திறன் மூளையின் இதுவரை அறியப்படாத தகவல்தொடர்பு முறையைக் காட்டுவதாக உள்ளது. இது மூளைக்குள் மிகவும் சிக்கலான தகவல் தொடர்பு நடைபெறுவதையும் உணர்த்துகிறது என ஆய்வு கூறுகிறது.

அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தில் ஜனவரி 2020 இல் பேசிய ஹம்போல்ட் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி மேத்யூ லார்கம், “டென்ட்ரைட்டுகள் மூளையைப் புரிந்துகொள்வதில் மையமாக உள்ளன, ஏனெனில் அவை ஒற்றை நியூரான்களின் கணக்கீட்டு சக்தியை நிர்ணயிக்கும் மையத்தில் உள்ளன” என்று தெரிவித்தார்.

இனி மூளைநரம்பு நோய்களால் பார்வை, பேச்சுத்திறன், கைகால் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் தங்களது சிந்தனையில் உள்ளதை வெளிப்படுத்தவும், விரும்பிய செயல்களைச் சிந்திப்பதன் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்தும் வகையில் சில திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மருத்துவத் துறைக்கு அப்பாற்பட்ட பல நோக்கங்களுடன் அது விரிவுபடுத்தப்பட இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tags :
Advertisement