For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்!

07:43 PM Oct 19, 2023 IST | admin
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்
Advertisement

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் ஸ்தலம் மேல் மருவத்தூர்,. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் வசதி உள்ளது. இப்பேர்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆன்மிக உலகில் பெண்களையும் அதிகளவில் பங்கெடுக்க வைத்தவர்.

Advertisement

இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் 'அம்மா' என்று அழைக்கப்படுகிறார்.

1978-ல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடங்கி வைத்தார். இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன.

பங்காரு அடிகளாரின் மேல்மருத்துவர் சித்தர் பீடம், பெண்களை மையப்படுத்தி ஒரு அமைப்பை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிதி வசூலிப்பதிலிருந்து அந்த நிதியை நிர்வாகம் செய்வது வரை அங்கு எல்லோரும் பெண்களே.

கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் எனும் வழக்கத்தை தமிழகத்தில் பரவலாக்கியதும் மேல்மருத்துவர் சித்தர் பீடம்தான். அதிலும் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்ய அனுமதித்தும், மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தியும் ஆன்மீகப் புரட்சி செய்தவரிவர். .

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது மிகப் பெரிய சமயப் புரட்சி.

உயர்சாதி மத குருக்கள் மட்டுமே தமிழகத்தில் பெரிய மத நிறுவனங்களை உருவாக்க முடியும் என்ற விதியை உடைத்தவர் பங்காரு. மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த மதகுரு அவர்.

30 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்மருவத்தூர் மிகவும் பின்தங்கிய பகுதி. ஆனால், இன்று மேல்மருவத்தூரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பங்காருவின் சித்தர் பீடம் நிறைய முன்னேற்றியிருக்கிறது.

இந்திய அரசு பங்காரு அடிகளாருக்கு 2019 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது [3] வழங்கி சிறப்பித்துள்ளது.

மேற்படி பங்காரு அடிகளாரால் சிறப்பு பெற்ற மேல்மருவத்தூர் வரலாறு!

கருவறைக் கட்டி அதிபராசக்தி ஸ்தாபிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அந்த இடம் புதர்களும் மரங்களும் நிறைந்த காட்டு மற்றும் கட்டுப்பாடற்ற வயல்வெளியாக இருந்தது. அந்த நிலம், அப்போதைய மேல்மருவத்தூர் கிராமத்தில் இருந்த அடிகளார் அம்மாவின் தந்தை ஸ்ரீ கோபால நாயக்கருக்குச் சொந்தமானது. ஸ்ரீ கோபால நாயக்கர் ஒரு விவசாயி ஆவார், அவர் தனது மனைவி ஸ்ரீமதி மீனாம்பாள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் வாழ்ந்தார், அவர்களில் மூத்தவர் பங்காரு அடிகளார் அவர்களின் முதல் மகளை இளம் வயதிலேயே சோகமாக இழந்தார்.

இந்த சிறிய கிராமத்தில், அவர்கள் தேவைப்படுபவர்களை கவனித்துக்கொள்வதால், அண்டை வீட்டார் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவதால், அவர்கள் தாராள மனப்பான்மை மற்றும் தொண்டுப் பணிகளுக்காக அறியப்பட்ட ஒரு முக்கிய மற்றும் மரியாதைக்குரிய நில உரிமையாளர் குடும்பமாக இருந்தனர். அவர்களது குடும்பம் பல உள்ளூர் மத விழாக்களுக்கு நிதியுதவி செய்தது மற்றும் அடிகளார் அம்மாவின் பெற்றோர்கள் இருவரும் ஆதிபராசக்தியின் பக்திக்கு பெயர் பெற்றவர்கள்.

இந்தச் சூழலில்தான் பங்காரு அடிகளார் வளர்ந்தார். இளம் வயதிலேயே அவர் தனிமையைத் தேடும் விருப்பமுள்ளவராக இருந்தார், மேலும் அவரது சகாக்கள் இளமைக் பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரது இளமைப் பருவத்தில் உள்ளூர் கோயில்களில் நேரத்தை செலவிடுவதற்கும் பக்தி பாடல்களைப் பாடுவதற்கும் ஈர்க்கப்பட்டதை பலர் இன்றைக்கும் நினைவு கூர்வார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இறைவன் ஏசு அல்லது ஸ்ரீ புத்தர் போன்ற பிற தெய்வீக அவதாரங்களின் பிறப்பைப் போலவே, குரு அடிகளாரின் பிறப்பும் தனித்துவமானதாம் உறவினர் பெண் ஒருவரால் குழந்தை தலையில் விழும் நேரத்தில் காப்பாற்றப்பட்டது. பல சம்பவங்கள் மற்றும் தெய்வீக வெளிப்பாடுகள் அவரது பெற்றோரை நம்பவைத்தது, அவர்களின் குழந்தை அன்னை ஆதிபராசக்தியால் உலகிற்கு உலகளாவிய உண்மைகளை கற்பிக்க அவரது அவதாரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. என மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் வரலாறு தனிக் கதை.

Tags :
Advertisement