தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்தோனேசியா தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு–12 பேர் பலி – 18 பேர் மாயம்!!

01:33 PM Jul 08, 2024 IST | admin
Advertisement

ந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில் அமைந்துள்ள பொலாங்கோ என்ற இடத்தில் சட்டவிரோதமாக தங்கம் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது.அந்த சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில் கிட்டத்தட்ட உள்ளூர் கிராமத்தை சேர்ந்த 33 பேர் இறங்கி தங்கம் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அதே போல் நேற்று (ஜூலை 7) அந்த சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில் இறங்கி தங்கத்தை தேடி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக மேல் பகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து காற்றுகூட போகாத அளவுக்கு அடைத்தது. திடீரென நடந்த இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்த பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலச்சரிவில் காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Tags :
gold mineIndonesialandslide
Advertisement
Next Article