For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கமல் அரசியல் பயணத் திட்டம் தயார்.! பிப்.21 முதல் பராக்.. பராக்!!

09:58 AM Jan 17, 2018 IST | admin
கமல் அரசியல் பயணத் திட்டம் தயார்   பிப் 21 முதல் பராக்   பராக்
Advertisement

கோலிவுட் நாயகன் கமல்ஹாசன் நம் தமிழக அரசியல் நிலவரங்களையும், அரசியல்வாதி களையும் ட்விட்டரின் புத்தம் புது தமிழ் மொழியில் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தவர், அவரின் பிறந்தநாளில் தீவிர அரசியலில் இறங்குவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது மக்கள் தங்கள் குறைகளை சொல்வதற்காக 'முதல்வன்' பட புகார் பெட்டிஸ்டைலில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவர் ட்விட்-டை குறைத்துக் கொண்டு , திடீரென சினிமா பக்கம் கவனத்தை செலுத்த தொடங்கினார். அதே சமயம் இவரின் திரை பார்ட்னரான ரஜினி அதிரடியாக கட்சி ஆரம்பிக்கும் பணியில் ஈடுப்பட்டதை அடுத்து  பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்த அறிவிப்பை அவர் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் , “'என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன.
அக்கடமைகளின் தொடக்கமாய் எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொடங்கஇருக்கிறேன். ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.

Advertisement

இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21-ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை தொடக்க இருக்கிறேன். இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று. பின்பற்றவே தலைவன் இருக்கவேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்கவேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

'இது ஆட்சியைப் பிடிப்பதற்கானத் திட்டமா?' என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு, குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்தவேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்தவேண்டும். அதைநோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement