For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

‘ஜோ’ படம் நூறு சதவீதம் பார்வையாளகளுக்கு ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரி!

11:37 AM Nov 10, 2023 IST | admin
‘ஜோ’ படம் நூறு சதவீதம் பார்வையாளகளுக்கு ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரி
Advertisement

‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலமாக பலருக்கும் பிடித்த நடிகராக மாறிய ரியோ ராஜ் , ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம் மூலம் சினிமாவுக்குள்ளும் நடிகராக அறிமுகமானார். பின்னர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கலந்து மேலும் பிரபலமான நிலையில் தற்போது மிக கவனமாக கதைகளை தேர்வு செய்து வருகிறர். அதன்படி, ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஜோ’. ரியோ ராஜ் இதுவரை நடித்த இரண்டு திரைப்படங்களும் காமெடியை முன்னிலைப்படுத்திய கதைக்களங்களாக இருந்தாலும், இந்த ‘ஜோ’ முழுக்க முழுக்க காதல் கதை. அதிலும் சாதாரண காதல் அல்ல, தமிழக – கேரள என்னும் இரு மாநில எல்லைகளுக்கு இடையேயான கதைக் களத்தில் நிகழும் காதலை மையப்படுத்தி தயாராகியுள்ளது இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் தங்களது காதல் வாழ்க்கை அல்லது தங்களது நெருங்கியவர்களின் காதல் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க கூடிய விதத்தில், ரசிகர்களின் மனதை தொடும் விதமாக உருவாகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள் .

Advertisement

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.அருளானந்தம் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம்.எஸ் எழுதி இயக்கியிருக்கிறார். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வருண்.கே.ஜி படத்தொகுப்பு செய்திருக்கிறார். இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக அறிமுக நடிகை மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிக்கா நடித்திருக்கிறார்கள். தமிழகம் மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள கல்லூரியில் கதை நடப்பது போல் இருப்பதால், கேரள பெண்ணை நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் முயற்சித்திருக்கிறார். அதன்படி கேரளாவை சேர்ந்த மாளவிகா மனோஜை நடிக்க வைத்திருக்கிறார். இவர்களுடன் சார்லி, அன்புநாதன், ஏகன், கெவின் ஃபெல்சன், வி.கே.விக்னேஷ் கண்ணா, விஜே ராகேஷ், இளங்கோ குமனன், ஜெயக்குமார், எம்.ஜே.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

இத்திரைப்படம் வரும் நவம்பர் 24-ம் தேதியன்று திரைக்கு வருவதையொட்டி படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நாயகனான நடிகர் ரியோ ராஜ் படம் குறித்து, “இந்த ‘ஜோ’ திரைப்படம் எங்கள் நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட எங்கள் ஒட்டு மொத்த அணியின் அடையாளம் மற்றும் முகவரி. மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். கதாநாயகனான ‘ஜோ’வின் பள்ளிக் காலத்தில் இருந்து அவனது திருமணத்திற்குப் பிந்தைய நாட்கள் வரையிலான காதல் பயணத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்காக நான் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பேன். இதன் காரணமாகவே, வேறு எந்த புராஜெக்ட்டிலும் கடந்த இரண்டு வருடங்களாக என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. டைரக்டர் ஹரிஹரன் என்னுடைய முதல் படத்தின் இயக்குநர். எங்களுக்குள் நான்கு வருட நட்பு இருக்கிறது. ஒரு அணியாக எங்களுடைய சிறந்ததைக் கொடுத்திருக்கிறோம். இதன் மொத்தப் படப்பிடிப்பும் வெறும் 37 நாட்களில் முடிவடைந்துள்ளது. இதற்கு தயாரிப்பாளரின் ஒத்துழைப்புதான் முழு முதற் காரணம். இந்த ‘ஜோ’ படம் நூறு சதவீதம் பார்வையாளகளுக்கு ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியாக இருக்கும். படத்தின் டீசர் அந்த உணர்வை பார்வையாளர்களுக்குள் நிச்சயம் கடத்தும்…” என்றார்.

டைரக்டர் ஹரிகரன் ராம் படம் பற்றி ”நான் ஹிப் ஹாப் ஆதியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருப்பதோடு, ரியோ அண்ணா நடித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். நாயகனின் 10 வருட வாழ்க்கை பயணம் தான் இந்த படத்தின் கதை. 17 வயது முதல் 25 வயது வரையிலான நாயகனின் வாழ்க்கையை ரசிக்கும்படியான காதல் கதையாக கொடுத்திருக்கிறேன். இரண்டு நாயகிகள், இருவரும் ஒரே மனநிலையில் இருப்பவர்கள். அதாவது, இந்த உலகத்தில் தனது தந்தை மட்டுமே தங்களுக்கு பாதுகாப்பை அளிக்க முடியும், அவரைப் போல் இருக்கும் ஒரு ஆண் தான் தங்களது வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்று எண்ணுகிறவர்கள், இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் நாயகன் நுழைகிறார். முதல் நாயகியுடனான காதல் சில காரணங்களுக்காக தோல்வியில் முடிகிறது. இரண்டாவது நாயகிக்கு வேறு ஒரு கனவு, வேறு ஒரு ஆசை இருக்கிறது. அவரை காதலித்து திருமணம் செய்யும் நாயகன், அவருடைய ஆசையை புரிந்துக்கொண்டு அதை நிறைவேற்றினாரா?, இல்லையா? என்பது தான் கதை.காதல் கதைக்கு இசை மிக முக்கியம், அதன்படி இசை ரீதியாக இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு சித்துகுமார் கொண்டு சென்றுவிட்டார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ரகமாக இருப்பதோடு, அவர்களின் மனதை உலுக்கும் விதமாகவும் இருக்கும். படத்திற்கு இசை மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்வீர்கள்.” என்றார்.

மியூசிக் டைரக்டர் அடிபொலி’ என்ற இண்டி பாடல், ’பேச்சுலர்’ படத்தில் ‘அடியே’ உள்ளிட்ட பெப்பி பாடல்களை கொடுத்த சித்து குமார் ” இந்த படத்துக்காக யுவன் சார் பாட்டு பாடியதோடு, அந்த பாடலில் தோன்றிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நான் இசையமைப்பாளராவதற்கு யுவன் சார் தான் தூண்டுதலாக இருந்தார். இந்த பாடலும் யுவன் சாரின் குரலினைக் கேட்டது. அதனால் அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று அனைவரும் விரும்பினோம். அதன்படி, பாடலுடன் அவரை சந்தித்தோம், பாட்டை கேட்டதும் அவர் பாட சம்மதம் தெரிவித்துவிட்டார். பாடலில் அவர் தோன்றியதற்கு ரியோ ராஜ் தான் காரணம். அவர் தான் யுவன் சாரிடம் பாடலில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். தன்னுடைய பாடலை தவிர வெளி பாடல்களில் யுவன் சார் தோன்றியதில்லை, ஆனால் எங்கள் பாட்டுக்காக அவர் நடித்துக் கொடுத்தார். இது எங்கள் படத்திற்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்திருக்கிறது.” என்றார்.

Tags :
Advertisement