For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பாஜக ஆட்சி வந்தால், திமுகவின் விளக்கு அணைக்கப்படும் !- பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா ஆவேசம்!

09:09 PM Feb 11, 2024 IST | admin
பாஜக ஆட்சி வந்தால்  திமுகவின் விளக்கு அணைக்கப்படும்    பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆவேசம்
Advertisement

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். முன்னதாக சென்னை மிண்ட் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் நட்டா சுவாமி தரிசனம் செய்தார், அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து யாத்திரை வாகனத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோருடன் அவர் பங்கேற்றார்.

Advertisement

சென்னையில் பாஜக யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் சென்னை தங்கசாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர், ஆனால் தடையை மீறி நட்டா யாத்திரையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் நட்டாவுடன் அண்ணாமலை, எல். முருகன், வானதி சீனிவாசன், எச். ராஜா உள்ளிட்ட பாஜக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, “ஒரு சில நாட்களில் 234 தொகுதிகளிலும் பாஜக பாதயாத்திரையை நிறைவு செய்யும். இந்த தமிழ்நாடு தேசிய வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகிறது. திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் பங்களிப்பு, நம்மை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களின் இதயங்களில் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. தமிழ்நாடு பிரதமரின் மனதில் எப்போதும் நிரந்திரமாக இடத்தை பிடித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து கௌரவித்து இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு பெருமை கொள்ளும் விதத்தில் இருக்கிறது. செல்வாக்கு நிறைந்த தமிழ்நாடு, ஆனால் திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து வருகிறது. இங்கே மோசமான தலைவர்கள் இருக்கிற ஒரு ஆட்சி நடந்துகொண்டு வருகிறது. தமிழ்நாட்டை திசை திருப்பும் திமுகவின் தலைமையில் இந்த மாநிலம் இருந்து வருகிறது.

Advertisement

நான் வரும் போது கடைகளில் விளக்கு அணைக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் நீண்ட காலம் ஆகப் போவது இல்லை. பாஜக ஆட்சி வந்தால், திமுகவின் விளக்கு அணைக்கப்படும். நாம் என் மண், என் மக்கள் என சொல்லும் போது நமது மண்ணும், நமது மக்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே நோக்கமாக அமைகிறது.

பிரதமர் இந்த ஆட்சிக்கு வந்தது முதல் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தில் இந்த மண்ணை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார். இந்த மண்ணில் யாரெல்லாம் ஊழல் ஆட்சி செய்து வருகிறார்களோ, அவர்கள் எல்லாம் தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்துகொண்டு இருக்கிறது. இந்தியில் பேசுவது எனது கோரிக்கை.நாம் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் இந்தியாவை பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு கொண்டு வருவோம். பாரத நாடு ஆட்டோ மொபைல் துறையில் ஜப்பானை மிஞ்சும் அளவிற்கு சாதனை படைத்து வருகிறோம். இன்றைக்கு 95% மொபைல் உதிரி பாகங்கள் இந்தியாவில் தயார் ஆகின்றன. காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 மற்றும் ராம ஜென்ம பூமி அமைப்பு உள்ளிட்டவற்றில் நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே 2024 தேர்தலில் மோடி ஆட்சி அமைக்க உங்கள் ஆதரவை தர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்

Tags :
Advertisement