For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குஜராத்: நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு!

09:04 AM Apr 28, 2024 IST | admin
குஜராத்  நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு
Advertisement

ண்மை காலமாக நாடு முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் பல மடங்கு அதிகரித்த வண்ணமுள்ளது. வட மாநிலங்களிலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கஞ்சா, ஹெராயின் என உள்நாட்டு போதைப்பொருட்கள் முதல் மெத்தபேட்டைமைன் வரையிலான வெளிநாட்டு போதைப்பொருட்களும் அதிக அளவில் புழங்கி வருகிறது. சென்னையில் அண்மையில் 2,500 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இது தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வட மாநிலங்களில் போதைப்பொருட்களை சட்டவிரோத கும்பல்கள் அதிக அளவில் தயாரிப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (என்சிபி) தகவல் கிடைத்தது. இதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவும், குஜராத் தீவிரவாத தடுப்புப் படையும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கின. இதில் குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் கண்டுப்பிடிக்கப்பட்டன.

Advertisement

இதேபோல, ராஜஸ்தானின் ஜலோர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் பிரம்மாண்டமான போதைப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொழிற்சாலைகள், பிரம்மாண்டமான வேதியியல் ஆய்வகம் போல காட்சியளித்தன. அமெரிக்காவின் புகழ்பெற்ற வெப்சீரீயஸான ‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) நாடகத்திலும் இதுபோல போதைப்பொருள் ஆய்வுக் கூடம் காட்டப்பட்டிருக்கும்.

இந்நிலையில், குஜராத், ராஜஸ்தான் போதைப்பொருள் தொழிற்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ எடையிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் போதைப்பொருட்கள் விநியோகிக்கப் படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த போதைப்பொருள் தொழிற்சாலைகளை அமைத்து, போதைப்பொருட்களை தயாரித்து வருபவர்களை தீவிரவாத தடுப்பு படையினர் தேடி வருகின்றனர்.

Tags :
Advertisement