For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குஜராத்;பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் - போட்டியின்றி தேர்வு!

05:22 PM Apr 22, 2024 IST | admin
குஜராத் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால்   போட்டியின்றி தேர்வு
Advertisement

ந்தியா முழுக்க பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ம் தேதி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது.

Advertisement

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் மே மாதம் 7ம் தேதி 3வது கட்டத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. . இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்தது.மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சூரத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி-யை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர் தங்களது கையெழுத்து இல்லை எனத் தெரிவித்தனர்.

Advertisement

மேலும், நிலீஷ் கும்பானியின் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவுக்கும் இதே 3 பேர் தான் வேட்புமனுவில் முன்மொழித்தனர்.இதையடுத்து, சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலீஷ் கும்பானி மற்றும் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இந்த நிலையில், மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 8 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில், 19ம் தேதியோடு வேட்போனு தாக்கல் நிறைவடைந்தது. 20ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது. சூரத் தொகுதியில் மொத்தம் 24 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ்பாய் கும்பானியின் வேட்பு மனுவில் பல்வேறு தவறுகள் இருப்பதாக கூறி பாஜக சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி நிலேஷ்பாயின் வேட்பு மனுவை நிராகரித்தார். இதேபோல் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த பாட்ஷாலா சுரேஷ்பாய் என்பவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் வேட்பு மனுவில் முன்மொழிவோரின் பெயர்கள் தவறாக இருந்ததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இறுதியாக பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் உட்பட 9 பேரின் வேப்பமனுக்கள் ஏற்கப்பட்டிருந்தது. இதனிடையே இன்றுடன் வேப்பமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள் என்பதால், முகேஷ் தலாலை எதிர்த்து போட்டியிட்ட 8 வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றனர். இதனால் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து, அதற்கான சான்றுகளை அவரிடம் வழங்கினார். இதன் மூலம் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.இதனிடையே சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானிக்கு முன்மொழிந்தவர்கள் திடீர் மாயம் ஆகி உள்ளனர். காங். வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனுவில் கையெழுத்திட்டவர்களை பாஜகவினர் கடத்திச் சென்றதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

Tags :
Advertisement