For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

காசா ஹாஸ்பிடல் அட்டாக் நாடகம்!?

04:55 PM Oct 19, 2023 IST | admin
காசா ஹாஸ்பிடல் அட்டாக் நாடகம்
Advertisement

ன்னை காத்துக்கொள்ள இந்த மனித மிருகங்கள் தன்னை சார்ந்தவனைக்கூட கொல்லும்! தெற்கு காசாவில் ஒரு மருத்தவமனையை ராக்கெட் தாக்கியது. அதில் அந்த மொத்த மருத்துவமனையும் தகர்ந்து போனது, அதில் 500 பேர் இறந்தனர், 900 வரை இறந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள், உடனே அதை இஸ்ரேல் தாக்கியது என்று ஹமாஸ் இயக்கம் சொன்னது. இஸ்ரேல் தாங்கள் தாக்கவில்லை என்று சொல்ல, ஹமாஸ் - எங்களிடம் இவ்வளவு பெரிய ஆயுதம் இல்லை என்பதால், இது இஸ்ரேல் இடம்தான் இருக்க முடியும், அதனால் அதுதான் நடத்தியது என்று கம்பி கட்டினார்கள்.

Advertisement

ஆமாம், அது சரிதானே என்று நமக்கே நினைக்கத் தோன்றினால், ஆட்டு மூளையை கொண்டவனுகளுக்கு என்ன தோன்றும்? உடனே ஈரான்ல இருந்து துருக்கி வரை நடு இரவில் ரோட்டுக்கு வந்து ஒரு பக்கம் போராட, சீனா முதல் தத்தி வரை மறுபக்கம் இஸ்ரேலை என்ன செய்யப்போகிறோம் பார் என்று கத்தினானார்கள், நாங்கள் செய்யவில்லை என்று சொல்ல, அதற்கு இஸ்ரேல் அதற்கான தரவுகளை அடுக்கியது. ஆம், இதுவெல்லாம் இந்த மிருகங்கள்தான் செய்யும் என்பதை முன்கூட்டிய கணித்த, இஸ்ரேல் நடப்புகளை வீடியோ செய்து வைத்திருந்தது. மேலும் இந்த தாக்கெட் தாக்குதல் நடந்தது தவறாக திசை மாறிய ராக்கெட்டாக இருக்க வேண்டும் என்று வீடியோ ஆதாரத்துடன் சொல்லியது. மேலும் அந்த ஹாஸ்பிடலையே தகர்க்கும் அளவிக்கெல்லாம் இஸ்ரேலிடம்தான் ஆய்தம் உள்ளது என்று ஹமாஸ் சொன்னதை மறுக்க, அது எப்படி நடந்தது என்று ஆராய்ந்து, புலானாய்வில் சொல்லி இருக்கிறது.

🔥 காசாவில் பல ராக்கெட்டுகள் இருந்தாலும், அதை ஏவ லாஞ்சர் தேவை. அவற்றையெல்லாம் இஸ்ரேல் அழித்துவிட்டதால், அதை ஹாஸ்பிடல் போன்ற இடங்களில் ஹமாஸ் பதுக்கி வைத்துள்ளது. அதற்கு அங்கே பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணமா அல்லது அங்கே தாக்கினால் எல்லாம் அழியட்டும், அப்போது உலகம் பற்றி எரியும் என்ற அமைதி மார்க்கத்தின் கொளகையா? தெரியவில்லை. குறிப்பாக அங்கே நிறுதியிருந்த கார் பார்க்கிங்கில் விழுந்தபோது வெடித்தது என்றால், ஆயுதங்கள் காரில் அல்லது வாகனங்களில் இருந்திருக்க வேண்டும்..!

Advertisement

அடுத்து இதை செய்ததது யார்?

ஹமாஸ் செய்திருக்காது என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் இங்கே பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் இயக்கம் என்பது தெரியவந்துள்ளது. அது ஹமாஸுக்கு அடுத்த, அதே சமயம் எதிரியான இயக்கம் என்பதால், அது உலகளவில் இது மத போராக மாற்ற, இதை செய்திருக்கிறது என்பதை தாக்குதலுகு பிறகு நடந்த டெலிபோன் உறையாடலை சாட்சியாக்கி இருக்கிறது. அப்பேர்ப்பட்ட மனித மிருகங்கள், தங்கள் மக்களை கேடயமாக பயன்படுத்தியது முதல் அரசியல் ஆதாயத்துக்காக அவர்களையே கொன்று 500 பேரை கொன்றுள்ளது.

இந்த கேடுகெட்ட மிருகங்கள் 40 குழந்தைகளை கொன்றது, அந்த குழந்தைகள் அஞ்சி நடுங்குவதை படத்தில் பாருங்கள். அப்படிப்பட்ட மிருககங்கள் இதை செய்யவெல்லாம் அஞ்சுமா?

ஆனால் அதுபோன்ற செய்திகள் எல்லாம் இருட்டடிப்பு செய்வதால் நாம் எழுதி, பகிர வேண்டியிருக்கிறது.

மரு. தெய்வசிகாமணி

Tags :
Advertisement