For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.நட்வர் சிங் காலமானார்!

10:13 AM Aug 11, 2024 IST | admin
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே நட்வர் சிங் காலமானார்
Advertisement

ந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.நட்வர் சிங் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ர் 10) காலமானார். அவருக்கு வயது 93.

Advertisement

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் 1931இல் பிறந்த அரச குடும்பத்தில் பிறந்த நட்வர் சிங், வெளியுறவுத் துறை அதிகாரியாக 31 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருந்தார்.1984இல் வெளியுறவுத் துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த நட்வர் சிங், 2004-05இல் மன்மோகன் சிங் அரசில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

Advertisement

'தி லெகசி ஆஃப் நேரு: எ மெமோரியல் ட்ரிப்யூட்' மற்றும் 'மை சைனா டைரி 1956-88' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 'ஒரு வாழ்க்கை போதுமானதாக இல்லை' என்ற பெயரில் ஒரு சுயசரிதையையும் எழுதி வெளியிட்டுள்ளார்.1984 ஆம் ஆண்டு, தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்றார்.

உடல்நலக்குறைவால் கடந்த இரண்டு வாரங்களாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இறந்தார்.இன்று ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சொந்த மாநிலமான டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கேயே திங்கட்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement