தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வாக்கு கேட்க வர்றவங்க இப்படியா பேசுவாங்க?

04:39 PM Mar 08, 2024 IST | admin
Advertisement

மிழ்நாட்டிற்கும் சேர்த்து 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பணியாற்றியவர் மக்களிடம் எப்படி வாக்கு கேட்க வேண்டு்ம்.!

Advertisement

2014ல் திரு. மன்மோகன்சிங் , தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில்

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கினோம்.!
சென்னை முதல் நாகர்கோவில் வரையில் 4 வழிச்சாலை அமைத்து கொடுத்துள்ளோம்.,
உளுந்தூர்பேட்டை முதல் கோயம்புத்தூர் வரையில் 4 வழிச்சாலை அமைத்து கொடுத்துள்ளோம்.,
திருச்சி முதல் திண்டுக்கல் வரையில் 4 வழிச்சாலை அமைத்து கொடுத்துள்ளோம்.,
தூத்துக்குடி முதல் திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக ஓசூர் வரையில் 4 வழிச்சாலை அமைத்து கொடுத்துள்ளோம்.,
பாண்டிச்சேரி முதல் திண்டிவனம் வரையில் 4 வழிச்சாலை அமைத்து கொடுத்துள்ளோம்.,
சென்னை முதல் ஓசூர் வரையில் 4 வழிச்சாலை அமைத்து கொடுத்துள்ளோம்.!
சென்னை முதல் தூத்துக்குடி வரையில் இரட்டை ரயில் பாதை அமைத்துள்ளோம்.,
சென்னை முதல் மதுரை வரையில் ரயில் மின் பாதைகள் உருவாக்கியுள்ளோம்.,
ரயில்வே மேம்பாலங்கள் உட்பட பல ரயில்வே திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.!
திண்டிவனம் - நகரி, மயிலாடுதுறை - மன்னார்குடி, ஈரோடு - பழனி உட்பட பல புதிய ரயில் பாதைகள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.!
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உட்பட பல கூட்டு குடிநீர் திட்டங்களை வழங்கியுள்ளோம்.!
சேது சமுத்திர திட்டம் வழங்கினோம்.!
சென்னை போக்குவரத்தை எளிதாக்க தாம்பரம், கத்திப்பரா, கோயம்பேடு, பாடி சந்திப்புகளில் மேம்பாலம் அமைத்தோம்.!
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கொடுத்தோம்.!
மதுரவாயல் முதல் துறைமுகம் வரையில் பறக்கும் மேம்பாலம் அமைத்தோம்.!
பல ஆயிரம் புதிய பேருந்துகளை JnUrm திட்டத்தில் வழங்கினோம்.!
அனைவருக்கும் உணவு திட்டத்தை உருவாக்கினோம்.!
சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை உருவாக்கினோம்.
பல மத்திய பல்கலைகழகங்கள் உருவாக்கினோம்...-என்று 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த திரு. மன்மோகன்சிங் திட்டங்களை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டார்.!

Advertisement

2014 - 2024ல் 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த திரு. நரேந்திர தாமோதரதாஸ் என்ன சொல்லி வாக்கு கேட்கிறார்.!

நான் 16 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி போய்ட்டேன்.!
எனக்கு குடும்பமோ குட்டியோ இல்லை.!
நீங்கள்தான் குடும்பம்.!
திமுக வாரிசு கட்சி.,
திமுக ஊழல் கட்சி.,
திமுக செய்த ஊழல் பணங்களை மீட்டெடுத்து மக்களிடம் கொடுப்பேன்.!
எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லவர்கள்.!
நேரு இந்தியாவிற்கு ஒன்றும் செய்யவில்லை.!
காமராஜர் நன்றாக ஆட்சி செய்தார்.!
காங்கிரஸ் ஊழல் கட்சி.!
ராஜாஜி நல்ல முதலமைச்சராக இருந்தார் -என்று ஹிந்தியிலேயே பேசி வாக்குகள் கேட்கிறார்.!

தமிழர்களை முட்டாள் என்று எண்ணுகிறாரா திரு .நரேந்திர.!

கந்தசாமி மாரியப்பன்

Tags :
BjpcongresselectionManmohansighnarendramoditalk like thistamilnaduvoteswho come to ask
Advertisement
Next Article