For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு மரணம் வராது!!!!

08:26 PM Dec 29, 2023 IST | admin
உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு மரணம் வராது
Advertisement

ரணம் உன்னதமானது.அதை உணரும் போதுஉயிர் உடலில் இருக்காது. உணர்வை சொன்னவரும் இல்லை. மரணம் என்பது மறைக்கப்பட்டதொரு விஷயமாகும். இது ஈசனின் தொழில் என்கிறது இந்துமதம்.இது எதனால்? யாரால்? எப்படி? எப்போ? என்கிற கேள்விகளுக்கு விடையே இல்லை. மரணத்தின் பின் மதங்களின் சம்பிரதாயங்கள் அதன் மூலம் வாழ்க்கை நடத்தும் சிலர்,மரணத்தின் பிற்பாடு ஆவி,பேய் என்று சொல்லி ஏமாற்றும் சிலர். உங்களிடம் ஒரு கேள்வி மிருகங்கள்,பறவைகள் இறந்தால் ஏன்? அவைகள் ஆவி ,பேயாக வருவதில்லை மனிதன் மாத்திரம் தான் அப்படி வரும்,ஏன்? யோசித்துப்பார்த்தால் விடை தெளிவாக தெரியும் நாம் எந்தளவு அறிவிலியாக உள்ளோம் என்று.

Advertisement

ஆனால் முற்காலத்தில் வாழ்ந்த துறவிகள் மரணத்தை கூட தள்ளிப்போடுமளவிற்கு அவர்களுக்கு சக்தியிருந்ததாக அறியமுடிகிறது. இது எந்தளவு உண்மை என்பது கேள்விக்குறியே? விஞ்ஞானத்தை எடுத்துக்கொண்டால் மரணம் என்பது மூளையின் தொழில்பாடு முற்றுமுழுதாக இல்லாமல் போவதையே மரணம் என்கிறார்கள். மூளையானது தனது செயற்பாடுகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் ஒருவிதமான ஹோமோன் ஒன்றை உற்பத்தி செய்கிறது இவ் ஹோமோனானது ஒருவித இன்ப உணர்ச்சியை அழிக்கிறது.மரணிக்கும் தருவாயில் மாத்திரமே மூளையானது இவ்வாறு செயல்படுவதாக விஞ்ஞானம் கூறுகிறது.

Advertisement

யோக சூத்திரத்தின் கடைசி நிலையானது சமாதி ஆகும்.அதாவது சமாதி நிலையையடைவது என்பது சுலபமானகாரியமில்லை .இந்நிலைக்கு வரும்போது சொல்லினால் விபரிக்கமுடியாதளவான இன்ப மகிழ்ச்சி கிடைப்பதாகவும் உணவின்றி,அசைவின்றி பல ஆண்டுகாலம் இருக்கமுடியும் என்பதை சில புத்தகங்கள் மூலமாக அறியமுடிகிறது.இது மரணத்திற்கு ஆப்படிக்கும் தொழில்நுட்பமாகும். சமாதி நிலையிலுள்ள மகிச்சியானது விஞ்ஞானத்தில் குறிப்பிடப்படும் மரணிக்கும் தருவாயில் உண்டாகும் இன்ப மகிழ்ச்சியை போன்றதா ??

அது சரி ஒரு மனிதன் எப்போது அச்சம் கொள்கிறான்.

இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான். உலகின் வேறு எதுவும் மனிதனை இத்தனை அசைத்துப் பார்ப்பதில்லை.

நமக்கு சோறு ஊட்டிய அன்னை, நம்மை தோளில் சுமந்த தந்தை, நாம் தூக்கி வளர்த்த பிள்ளை, நாம் இன்பதுன்பங்களை பகிர்ந்த வாழ்க்கை துணை, நம்முடன் சுற்றித்திரிந்த நண்பன், இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும். ஒருநாள் நமக்கும் இருக்கிறது என்ற எண்ணமே நம்மை ஆட்டிப்பார்க்கிறது.

மனதுக்கு நெருங்கியவரை குழிக்குள் இறக்கி மண்ணிட்டு மூடும் போது வரும் வெறுமை. நாம் தலையில் சேர்த்து வைத்திருக்கும் புகழ், ஈகோ, அகந்தை, கர்வத்தையும் சேர்த்து மண்ணோடு மூடிவிடும்.ஒரு மரணத்தை காணும் போது மனம் இறங்க வேண்டும்."மரணம் எனக்கும் வரும்" என்ற எண்ணம் தான் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.

பணம் மீது தீராத வெறி,
பதவி மீது தீராத வேட்கை,
இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம். ஒவ்வொரு மரணத்தை காணும் போதும் நம் மனதில் இருக்கும் வஞ்சம், பகை, ஈகோ, போன்றவற்றை மறக்க வேண்டும்.

அதாவது ஒரு பிரேதம் மண்ணில் அடக்கப்படும் போது வஞ்சம், பகை, ஈகோவையும் அத்தோடு மண்ணுக்குள் போட்டு அடக்க வேண்டும். மரணத்தின் எண்ணம் நம் இறையச்சத்தை அதிகரிக்கும். இதை எல்லாம் உணர மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். காரணம் மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும் போது, நம் மனமும் ஒரு முறை அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது.

இந்த மண்ணின் இயற்கை சுழற்சியை ஒழுங்கு செய்யும் ஒரே விசயம் மரணம் மட்டுமே.எனவே மரணத்தை நேசிப்போம்.காரணம் நமக்கு இவ்வுலகில் நிச்சயிக்கப்பட்ட பரிசாக மரணம் இருக்கிறது.

மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள். வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள்.

ஆனால் .....

நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள்.

இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன......💔

ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு மரணம் வராது !!!!

அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement