தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சர்ச்சை ஆசாமி மகாவிஷ்ணு கைது!

06:50 PM Sep 07, 2024 IST | admin
Advertisement

ரண்டு அரசுப் பள்ளிகளில் அதுவும் சென்னையில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் மகா மகாவிஷ்ணு குறித்தும் அவரின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு வீடியோக்களும் தகவல்களும் வந்த வண்ணமிருக்கின்றன. சமீபத்தில் கொடைக்கானலில் ரீட்ரீட் வகுப்புகள் என விளம்பரம் கொடுத்து இவர் நடத்திய பயிற்சி வகுப்புகளில் ஆண்களும் பெண்களும் ஆட்டம் பாட்டு என உற்சாகமாக இருந்த காட்சி அந்த வீடியோக்களில் பதிவானது வெளியாகி பெரும் ஐயத்தை கிளப்பி  இருக்கின்றன.

Advertisement

இந் நிலையில் இந்த  விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு வெளிநாட்டில் இருப்பதாகக் கூறி 'தான் ஓடி ஒளியவில்லை இன்று சென்னை திரும்பியவுடன் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பேன்' என வீடியோ வாயிலாக தெரிவித்து இருந்தார். அதே சமயம் மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் சென்னை போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர்.இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து அடையாறு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

அவர் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 'என்னுடைய ஏரியாவில் என்னுடைய ஆசிரியரையே பேசிவிட்டுச் சென்றிருக்கிறார் அவரை சும்மா விடமாட்டேன்' என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்த நிலையில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவருடைய ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags :
|ControversialSpeakermahavishnuஅரசு பள்ளிஆன்மிகம்மகா விஷ்ணு
Advertisement
Next Article