தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

09:14 PM Oct 16, 2024 IST | admin
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் இரண்டும் 53% ஆக உயர்ந்துள்ளன.

Advertisement

பணவீக்கம் காரணமாக உயரும் விலைவாசி உயர்வை ஈடுகட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும். அகவிலைப்படியானது சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் சுமார் 1.15 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

Advertisement

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் உள்ள ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு

- ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.

- அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும்.

- ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.

அடிப்படை சம்பளம் 50,000 ரூபாய் உள்ள ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு

- மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம்.

- அகவிலைப்படி 3% அதிகரித்த பின்னர், இவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும்.

- ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும்.

இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

டிஏ அரியர்

அகவிலைப்படி அதிகரிப்பு அக்டோபரில் அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் (DA Arrears) தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

இதற்கு முன்னர் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

Tags :
அகவிலைப்படிமத்திய அரசு
Advertisement
Next Article