தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி பட நிறுவனர் ஜி.டில்லி பாபு காலமானார்!

01:21 PM Sep 09, 2024 IST | admin
Advertisement

க்சிஸ் ஃபிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவியவர் ஜி.டில்லி பாபு. 2015-ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர், ‘மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’ மற்றும் ‘கள்வன்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

Advertisement

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். அதில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்.9) அதிகாலை காலமானார். இவருடைய மறைவு, திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

10 வருடங்களாக படங்களை தயாரித்து வரும் டில்லி பாபு, 2015ம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் ஆகியோர் நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்த மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள், கள்வன் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற படங்கள் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.

இவரது தயாரிப்பில் இயக்குனர்களாக அறிமுகமான பலர் தற்போது முன்னணி இயக்குனர்களாக உள்ளனர். அடுத்தடுத்து படங்களை தயாரிக்க கதைகளை கேட்டு, சிலருக்கு முன்தொகையும் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் டில்லி பாபு. இவரது அடுத்த வெளியீடாக வளையம் என்ற படம் இருந்தது. இந்த படத்தில் அவரது மகன் வ் நடித்து வந்தார்.

அது மட்டுமின்றி தொடர்ச்சியாக டில்லி பாபு படங்கள் தயாரிப்பதற்கு பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தார் என்பதும் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திரையுலகினர், “புதுமுக, இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தவர் டில்லி பாபு” என புகழாரம் சூட்டியுள்ளனர்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: “தயாரிப்பாளர் டில்லி பாபுவின் மரணம் திரையுலகத்துக்கு பேரிழப்பு. ஏராளமான புதுமுக மற்றும் இளம் இயக்குநர்களுக்கும் திறமையான கலைஞர்களுக்கும் வாய்ப்பளித்தவர். அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.”.

இசையமைப்பாளர் ஜிப்ரான்: “பெருங்கனவுகளை உள்ளடக்கிய பரந்த பார்வையும் கொண்டவர். அதனை சாத்தியப்படுத்துவதற்கு கடும் உழைப்பை செலுத்தியவர். அவரது மறைவு திரையுலகத்துக்கு பேரிழப்பு.”

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன்: “டில்லிபாபு சார் மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் எனக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்தவர்.ஒரு நல்ல மனிதரை.. ஒரு நல்ல தயாரிப்பாளரை.. ஒரு சாதனையாளரை..தமிழ் திரையுலகம் இழந்து விட்டது..மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.”

நடிகர் ஆதி: “மிகுந்த கனத்த இதயத்துடன் உங்களுக்கு பிரியா விடை கொடுக்கிறோம் டில்லி பாபு சார். வெகு சீக்கிரத்தில் சென்று விட்டீர்கள். எப்போதும் அன்பாகவும், ஆதரவாகவும், ஊக்கமளிப்பவராகவும் இருந்ததற்கு நன்றி. நீங்கள் மறைந்தாலும் சினிமா மீதான உங்கள் காதல் என்னென்றும் வாழும்.”

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: “தயாரிப்பாளர் டில்லி பாபு மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறந்த மனிதர். நல்ல தயாரிப்பாளர். சந்தேகமில்லாமல் திரையுலகத்துக்கு இது ஒரு பேரிழப்பு.”

நடிகர் அசோக் செல்வன்: “டில்லி பாபு மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. திரையுலகத்துக்கான உங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனக்கு தனிப்பட்ட முறையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மூலம் என்றென்றும் நினைவில் இருப்பீர்கள்.”

இயக்குநர் சுசீந்திரன்: “நிறைய புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரின் மறைவு புதுமுக இயக்குநர்களுக்கு பேரிழப்பு. மிகவும் எளிமையான, தன்மையான மனிதர். அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”

Tags :
Axess Film FactoryDilli BabuPassed Away |
Advertisement
Next Article