For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இரா.நல்லகண்ணு 100வது பிறந்தநாள் பரிசாக, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர்-முதலமைச்சர் அறிவிப்பு!.

02:33 PM Dec 26, 2024 IST | admin
இரா நல்லகண்ணு 100வது பிறந்தநாள் பரிசாக  ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் முதலமைச்சர் அறிவிப்பு
Advertisement

ந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை, தரம் உயர்த்தப்பட்டு, ‘தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்’ என அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா. நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதை அடுத்து 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடும் இரா. நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, நல்லகண்ணு பெயரைச் சூட்டிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா. நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.

இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் இரா. நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும்வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு ‘தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்’ எனப் பெயரிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement