தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கோர்ட்டுகளில் வழக்கை ஒத்திவைக்கும் கலாசாரம் - ஜனாதிபதி முர்மு யோசனை!

06:37 PM Sep 02, 2024 IST | admin
Advertisement

சுப்ரீம் கோர்ட் ஏற்பாட்டில், மாவட்ட நீதிபதிகளின் 2 நாள் தேசிய மாநாடு டெல்லியில் நடந்தது. நேற்று அதன் நிறைவு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், நீதிபதி சூரியகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

சுப்ரீம் கோர்ட்டின் இலச்சினையை ஜனாதிபதி வெளியிட்டார்.

Advertisement

மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசிய போது, ''சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகள் காரணமாக இந்திய நீதித்துறை மிகவும் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது. சுப்ரீம் கோர்ட் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, நமது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தப் பல திட்டங்களை உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிபதியையும் மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு நீதிபதியும் தர்மம், உண்மை மற்றும் நீதியை மதிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது. நமது நாட்டின் கோடிக் கணக்கான மக்களின் நீதித்துறை மீதான நம்பிக்கையை மாவட்ட நீதிமன்றங்கள் தான் தீர்மானிக்கின்றன. மக்களுக்கு நீதியை விரைவாகவும் குறைந்த செலவிலும் வழங்குவதே நமது நீதித்துறையின் வெற்றியின் அடிப்படையாகும்.

கடந்த சில ஆண்டுகளில் மாவட்ட அளவில் நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் நாம் பல வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. குறிப்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் நீதித்துறைக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. 32 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட சில வழக்குகள் தேங்கி இருப்பது நம் அனைவருக்கும் பெரிய சவாலாக இருக்கிறது. அதற்கு விரைவாக நீதி வழங்குவது அவசியம். விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய கோர்ட்டுகளில் வழக்குகளை ஒத்திவைக்கும் கலாசாரத்தை மாற்று வதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

நீதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து நீதிபதிகளுக்கும் இருக்கிறது. கோர்ட் அறையில் சாதாரண மக்களின் மனஅழுத்தம் அதிகரிக்கிறது. இத்தகைய ‘கருப்பு கோட் வியாதி’யை ஆய்வு செய்ய வேண்டும். பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியபோது, ''மாவட்ட கோர்ட்டுகளில் 6.7 சதவீத உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே பெண்களுக்கு உகந்ததாக இருக்கின்றன. இது ஏற்கக்கூடியதா? கோர்ட்டுகளில் பெண்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.நீதித்துறையில் பெண்கள் வருகை அதிகரிக்கும் நிலையில், அவர்கள் மீதான பாரபட்சம் களையப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை கோர்ட்டுகள் அளிக்க வேண்டும்'' என்று அவர் பேசினார்.

Tags :
casesPresident of IndiaSCSupreme Court
Advertisement
Next Article