தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

🦉தமிழ் நவீன இலக்கியத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான க. நா. சுப்ரமண்யம் காலமான தினமின்று🐾😢

06:40 AM Dec 18, 2023 IST | admin
Advertisement

மிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) காலமான தினமின்று

Advertisement

க.நா. சுப்ரமணியம் (1912-1988) எழுதிய நூல்களை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள்,மொழிபெயர்ப்புகள் என ஆறு வகையாகப் பிரிக்கலாம். இலக்கிய வரலாறு அவரை விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பதிவு செய்து கொண்டு அவரது மற்றவகைப் படைப்புகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது...20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பாரதியாரால் மேற்கொள்ளப்பட்ட மரபை மீறிய புதிய வகையிலான கவிதை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் “free verse”என்று மேலை நாட்டினரால் மேற்கொள்ளப்பட்ட வசனகவிதை முறையை தமிழில் பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி மேற்கொண்டு பல சோதனைகளைச் செய்தார். அவற்றில் வெற்றியும் பெற்றார்.

Advertisement

இந்நிலையில் செத்துக் கொண்டிருந்த பழைய யாப்புக் கவிதை மரபிற்கு மாற்றாக புதிய முறை அவசியம் என்று ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், க.நா.சு ஆகியோர் கணித்திருந்தனர். இவர்களில் ந.பிச்சமூர்த்திக்குப் பின் புதிய சோதனைகளை புதுமைபித்தன் தீவிரமாக கைகொண்டார். எனினும் இப்புது ரீதியான கவிதை முறைக்கு பண்டிதர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

எந்த ஒன்றும் புதியதாக வருகிறபோது அவை எதிர்ப்பை சந்திக்கும் என்று இலக்கியத்தில் பரவலாகக் காணப்பட்டு வருகிறது. அது போல் மரபை மீறி முயன்ற கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்த நிலையில் அதனைக் கையாண்டு வெற்றி பெற்றவர்களுள் க.நா.சு குறிப்பிடத்தக்கவர்.

* திருவாரூர் மாவட்டம் வலங்கை மானில் (1912) பிறந்தவர். தந்தை அஞ்சல் துறை அதிகாரி. சிறுவயதிலேயே தாயை இழந்த வர், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே ஏராளமான ஆங்கிலப் படைப்பு களைப் படித்தார்.தன் கல்லூரி நாட்களிலேயே கவிதை எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார். அதற்கு தூண்டுகோலாக அமைந்தது டி.எஸ்.எலியட்டின் நூல்கள் என்று குறிப்பிடுகிறார். அன்றைய கல்லூரி இளைஞர்களுக்கு டி.எஸ்.எலியட் மிகப் பிரபலமும் கூட.

“ஆங்கிலத்தில் free verse என்று சொல்லப்பட்டதற்குச் சரியான பதம் வசன கவிதை என்றுதான் நாங்கள் எல்லோருமே எண்ணியிருந்த காரியம். பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன் எல்லோருமே வசன கவிதை என்றுதான் அப்போது அதைக் குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஓரளவுக்கு முன்மாதிரியாகத் தமிழில் பாரதியாரின் காட்சிகளும், ஆங்கிலத்தில் வால்ட்விட்மன் கவிதைகளும் பயன்பட்டன. நான் மேலே குறிப்பிட்ட நால்வருக்குமே டி.எஸ்.எலியட் படிப்பு உண்டு. டி.எஸ்.எலியட் பற்றிய விமரிசனப் போக்கிலும் ஈடுபாடு உண்டுதான்.”என்று க.நா.சு குறிப்பிடுகிறார்

*இதை அடுத்து எழுத்தாளராக வேண்டும் என்று இளம் வயதிலேயே தீர்மானித்தார். சென்னைக்கு வந்து சேர்ந்த பிறகு, முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் புதுக்கவிதை, நாவல், சிறுகதை, விமர்சன நூல், மொழிபெயர்ப்பு என்று இவரது இலக்கியக் களம் விரிந்தாலும் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவந்தார்.

* தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி நன்கு அறிந்திருந்தார். உலக இலக்கியத்துக்கு இணையாகத் தமிழ் இலக்கியம் பேசப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். தமிழின் சிறந்த படைப்புகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்க்கும் விதமாக, உலகப் புகழ்பெற்ற சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

* மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் எழுதினார். ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ‘எழுத்து’ உள்ளிட்ட இதழ்கள், ‘ராமபாணம்’, ‘இலக்கிய வட்டம்’, ‘முன்றில்’ உள்ளிட்ட சிற்றிதழ்களை நடத்தினார். தினமும் 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் சுமார் 15,000 கட்டுரைகள் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

* அன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவையான இலக்கிய விமர்சனத்தில் கவனம் செலுத்தினார். ‘சுதேசமித்திரன்’ இதழில் 1955-ல் சிறுகதை வளர்ச்சி குறித்த கட்டுரை எழுதினார். அதன் பிறகு, ஒரு விமர்சகராகவும் தீவிரமாக இயங்கினார்.

* தமிழில் அதிக எண்ணிக்கையில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர் என குறிப்பிடப்பட்டார். தமிழின் சிறந்த இலக்கியப் படைப்புகளை மீண்டும் மீண்டும் தன் இதழ்களில் குறிப்பிட்டு, வாசகர்களிடையே அவற்றைக் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர்.

* நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், விமர்சனக் கலை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைகள் என இவரது படைப்புலகம் விரிகிறது. இவரது ‘பொய்த்தேவு’ நாவல் இலக்கிய உலகில் இவருக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தந்தது.

* தான் வாழ்ந்துவந்த காலத்தின் போக்கு, எழுத்தின் வகைகள், நண்பர்கள், சங்ககால, தற்கால படைப்பாளிகள் முதலானவை குறித்து எழுதினார். சமரசம் செய்துகொள்ளாத விமர்சகரான இவர், உள்ளுணர்வின் உந்துதல்கள் அடிப்படையிலேயே செயல்பட்டார். இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கக்கூடியவர். சலிக்காத செயல்வேகம் கொண்டவர்.

* பல பிரபல இதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1986-ல் இவர் எழுதிய ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரைப் பற்றி ‘க.நா.சு.வின் இலக்கிய வட்டம்’ உள்ளிட்ட நூல்கள் வெளிவந்தன. இவரது நூல்களை தமிழக அரசு 2006-ம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.

* இறுதி மூச்சுவரை முழு நேர எழுத்தாளராகவே செயல்பட்டவர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்தவர்களில் முதன்மையானவராக விளங்கினார். வாசகர்களாலும் இலக்கிய வட்டாரத்திலும் ‘க.நா.சு’ என அன்போடு அழைக்கப்பட்ட க.நா.சுப்ரமணியம் 76-வது வயதில் இதே டிசம்பர் 18 (1988)இல் மறைந்தார்

Tags :
criticKa. Naa. Su.Ka. Naa. SubramanyamTamil writer
Advertisement
Next Article